இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சி-3' படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ளது சி-3. இந்தப்படத்தை காலை 11 மணிக்கு நேரடி ஒளிபரப்பாக வெளியிட இருப்பதாக தமிழ்ராக்கர்ஸ் இணயதளம் பகிரங்கமாக சவால்விட்டது. அதன் காரணமாக தியேட்டர் காரர்கள் அச்சத்தில் உறைந்து இருந்தனர்.
இந்நிலையில், தியேட்டருக்கு சென்று படம் பார்க்குமாறு தன்னுடைய ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் சூர்யா. சிங்கம்-3 படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் என்று நம்புகிறேன். உங்களின் அன்பு மற்றும் ஆசீர்வாதத்திற்கு நன்றி, இதுக்கெல்லாம் நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தவே பத்தாது. அனைவரும் தியேட்டருக்கு சென்று படத்தை பாருங்கள் என எனது பணிவான வேண்டுகோளை வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க, சி-3 படத்தை லைவ்வாக வெளியிடுவதாக அறிவித்த தமிழ்ராக்கர்ஸ், பேஸ்புக்கில் படத்தின் சில காட்சிகளை வெளியிட்டனர். ஆனால் அது உடனடியாக முடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஞானவேல்ராஜாவுக்கு முதல் வெற்றி கிடைத்திருக்கிறது.