ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழக அரசியலில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. நடிகர் நடிகைகள் தங்கள் கருத்துக்களை இணைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். "இளைஞர்களின் குரல் கேட்க வேண்டிய நேரம் இது" என்று மாதவன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
நம் தமிழ்நாடு உலகத்திலேயே சிறந்த மாநிலமாக இருக்க வேண்டும் என்ற பேசி வந்திருக்கிறோம். நமது திறமையையும், ஆற்றலையும் கொண்டு உலகுக்கே நாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். இந்த மகத்தான ஆற்றலை வழி நடத்த சரியான தலைமையும், நோக்கமும் வேண்டும். நாம் சரியான பாதையை நோக்கிக் செல்ல இதுவே சரியான நேரம். ஒட்டுமொத்த தமிழ்நாடும் இதனை நம்ப வேண்டும். சரியான நேரத்தில் அது நடக்கும். இளைஞர்களே உங்கள் குரல் கேட்கப்பட வேண்டிய நேரம் இது" என்று மாதவன் குறிப்பிட்டிருக்கிறார்.