இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
எம்.கே.தியாகராஜ பாகவதர் படங்களிலேயே நம்பர்-1 திரைப்படம் ஹரிதாஸ். 1944ம் ஆண்டு தீபாளிக்கு வெளியான இந்தப் படம் 1945, 1946ம் ஆண்டில் மூன்று தீபாவளி தாண்டி ஓடியது. தியாகராஜ பாகவதருடன் டி.ஆர்.ராஜகுமாரி, என்.சி.வசந்த கோகிலம், என்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்பட பலர் நடித்திருந்தனர். சுந்தர்ராவ் நட்கர்ணி இயக்கி இருந்தார். பாபநாசம் சிவனும், ஜி.ராமனாதனும் இணைந்து இசை அமைத்திருந்தனர்.
அதுவரை புராண படங்களில் நடித்து வந்த பாகவதர் முதன் முறையாக பெண் பித்தனாகவும், குடிகாரனாகவும், பெற்றோரை கொடுமைப்படுத்துகிறவராகவும் நடித்தார். அதனால் கால்களை இழந்து திருந்தி பிறகு ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடுகிறவராக நடித்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
அந்தக்காலப் படங்கள் குறைந்தது 3 மணி நேரம் ஓடும். அதிகபட்சமாக சம்பூர்வ ராமாயணம் படம் மூன்றரை மணி நேரம். இரண்டு இடைவேளை விடப்பட்டது. அப்படிப்பட்ட காலத்தில் ஹரிதாஸ் வெறும் 11 ஆயிரம் அடியில் எடுக்கப்பட்டது. மொத்தம் படம் 117 நிமிடங்கள்தான் ஓடும். இந்த 117 நிமிட நேரத்துக்குள்தான் 13 பாடல்களும் இருந்தது, கதையும் இருந்தது. மிகச் சிறந்த எடிட்டிங்கிற்கு இந்தப் படத்தை உதாரணமாக சொல்வார்கள். இயக்குனர் சுந்தர்ராவ் நட்கர்னியே படத்தை எடிட்டும் செய்திருந்தார்.
படம் 200 நாட்களை தாண்டியதும் ஒரே டிக்கெட்டில் படத்தை அடுத்தடுத்து இரண்டு முறை திரையிட்டுக் காட்டினார்கள். ஒவ்வொருவரும் படத்தை 10 முறை 20 முறை பார்த்து மகிழ்ந்தார்கள். அப்போது வெளிநாட்டில் இருந்து பிலிம் வந்து கொண்டிருந்தது. ஆனால் படத்தயாரிப்பு அதிகமானது. அதனால் அரசால் அதிக அளவில் பிலிம் சப்ளை செய்ய முடியவில்லை. அதனால் ஒரு படம் 11 ஆயிரம் அடிக்குள்தான் இருக்க வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்தது. அதனால்தான் ஹரிதாஸ் 11 ஆயிரம் அடிக்குள் எடுக்கப்பட்டது. ஆனால் இயக்குனர் சுந்தர்ராவ் நட்கர்னி எடுக்க முடிவு செய்திருந்தது 25 ஆயிரம் அடிக்கு.