'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆளும்கட்சியான அதிமுக.,விற்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசலால், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தன்னை கட்டாயப்படுத்தி தான் ராஜினாமா செய்ய வைத்தனர் என்று பகிரங்கமாக தெரிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே சசிகலாவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் பன்னீர் செல்வத்தின் பேட்டியும் சசிகலாவிற்கு எதிரான அதிருப்தியை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் மட்டுமல்லாது திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அப்படி ஆதரவு தந்தவர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம்...
கமல் : நான் பன்னீர்செல்வத்தின் நண்பனும் அல்ல. எதிரியும் அல்ல. ஓ.பன்னீர் செல்வம் திறமையற்றவர் அல்ல. ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவர் திறமையாக வெற்றி கண்டுள்ளார். அவர் மீண்டும் முதல்வராக ஆட்சி வர வேண்டும். ஜனநாயக ரீதியான எனது விருப்பம் இதுதான் என்று கூறியுள்ளார்.
கவுதமி : இதற்காகத்தான் ஜெயலலிதா, ஓபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்தார். தன் மனசாட்சிப்படி நடக்கும் தைரியம் கொண்டவர் ஜெயலலிதா, தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காபாற்றினார் ஓபிஎஸ் என்று கூறியுள்ளார்.
பாக்யராஜ் : பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து பேசிய பாக்கியராஜ், தன் ஆதரவு என்றும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஆர்யா : "ஓ.பன்னீர்செல்வம் சரியான நேரத்தில் சிறப்பாக துணிச்சலாக பேசி இருக்கிறார். பாராட்டுகள்"என்று கூறியுள்ளார்.
சித்தார்த் : "மெரினாவில் ஓ.பி.எஸ். தமிழக அரசியல் உண்மையாகவே கேம் ஆப் த்ரோன்ஸ் மற்றும் ஹவுஸ் ஆப் கார்ட்ஸ் சீரியல்களைப்போலவே இருக்கிறது"என்று கூறியுள்ளார்.
எஸ்.வி.சேகர் : "அ.தி.மு.கவில் ஓர் ஆண் மகன். ஒரு பொருளாளர் நீக்கத்தில் பிறந்ததுதான் அ.தி.மு.க. எனும் கட்சி. வரலாறு திரும்புகிறது"என்று கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் இமான் : "தமிழக அரசியலில் நம்பிக்கை துளிர்விட்டு இருக்கிறது. இதுதான் சிறந்த வழி. சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்து சரியான பேச்சு. நீதி நிலை நாட்டப்பட்டு இருக்கிறது"என்று கூறியுள்ளார்.
அருள்நிதி : "தமிழக மக்களுக்கு உண்மையை தெரிவித்து நேர்மையாக நடந்து இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். தைரியமான பேச்சு"என்று கூறியுள்ளார்.
குஷ்பு : "ஒரு நாயகன் உதயமாகிறான்"என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டு உள்ளார்.
சமுத்திகனி : ஓபிஎஸ்-க்கு என் சல்யூட். தமிழக மக்கள் ஓபிஎஸ்., தான் விரும்புகிறார்கள். எம்எல்ஏ.,-க்கள் கையில் தான் உள்ளது. சசிகலாவிடம் ஒரு மெச்சூரிட்டி இல்லை, அவர் பேசுவது காமெடியாக உள்ளது. சசிகலாவின் பேச்சை நிச்சயம் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் : கண்ணா சிங்கம் சிங்கிளா தான் வரும். ஓபிஎஸ்., நீங்கள் அனைவரின் மனதிலும் நின்றுவிட்டீர்கள். இன்னும் பல உண்மைகள் வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரேயா ரெட்டி : சரியான தருணத்தில் பன்னீர்செல்வம் ஹீரோவாக செயல்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
கங்கை அமரன் : சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன். பன்னீர் செல்வம் உண்மையான ஆம்பள, எம்எல்ஏ.,க்கள் ஆதரவு சசிகலாவிற்கு இருந்தாலும், மக்களின் ஆதரவு பன்னீர் செல்வத்திற்கு தான் உள்ள என்று கூறியுள்ளார்.
மன்சூரலிகான் : சிங்கமாக பூனைக்கு மணி கட்டியிருக்கிறார் பன்னீர் செல்வம். ஒரிஜினல் பன்னீர் செல்வம். தமிழகமே உங்கள் பக்கம் இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே உங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.