ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜீவா நடித்த ரெளத்திரம் படத்தை இயக்கியவர் கோகுல். அதன்பிறகு விஜய சேதுபதி நடிப்பில் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கியவர் பின்னர் கார்த்தி நடிப்பில் காஷ்மோரா படத்தை இயக்கினர். அப்படி அவர் இயக்கிய மூன்று படங்களுமே பேசப்பட்ட படங்களாக அமைந்தன. இந்த நிலை யில் தற்போது தனது நான்காவது படத்திற்கான கதை விவாதத்தில் ஈடு பட்டுள்ளார் கோகுல்.
அந்த படம் குறித்து விசாரித்தபோது, தனது புதிய படத்தை விஜயசேதுபதியை நாயகனாக வைத்து இயக்குகிறாராம் கோகுல். மேலும், இதற்கு முன்பு அவரை வைத்து இயக்கிய இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை போலவே இந்த படத்தையும் காமெடி கலந்த கதையில் இயக்குகிறாராம். அதனால் விஜயசேதுபதியுடன் சில முன்னணி காமெடியன்களும் இணைகிறார்களாம். தற்போது நடித்துவரும் கருப்பன், அநீதி கதைகள் படங்களை முடித்த பிறகு இந்த படத்தில் விஜயசேதுபதி நடிப்பார் என்று தெரிகிறது.