டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தம்பிக்கோட்டை, கந்தகோட்டை, ஒன்பதுலகுரு, ஜாம்பவான், போக்கிரிராஜா உள்பட சுமார் 25 படங்களில் நடித்திருப்பவர் காமெடி நடிகர் கே.பி.சிவா. தற்போது அறம், சதுரங்கவேட்டை-2 உள்பட பல படங்களில் நடித்து வரும் இவர், நடிகர் கே.ஏ.தங்கவேலுவை போன்று கருத்துள்ள காமெடி கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார்.
அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நான் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தபோதும், ஜாம்பவான் படத்தில் நடித்த, எனக்கொரு கடமை பாக்கி இருக்கு -என்கிற காமெடி காட்சி சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதுவரை கிடைக்கிற வேடங்களில் நடித்து வந்த நான் இப்போது என்னை கவர்ந்த காமெடி நடிகரான கே.ஏ.தங்கவேலு பாணியில் காமெடி கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன்.
இப்போது நான் நடித்து வரும் அறம் படத்தில் கிராமவாசியாக நடிக்கிறேன். கலெக்டராக கிராமத்துக்கு வரும் நயன்தாராவிடம், கிராமத்திலுள்ள குறைகளை சொல்லும் அழுத்தமான ரோலில் நடிக்கிறேன். அதேபோல் சதுரங்கவேட்டை-2 படத்தில் மனோபாலா காம்பினேசனில் காமெடி போலீசாக நடிக்கிறேன். இந்த படங்களைத் தொடர்ந்து மஜீத் இயக்கும் ஒரு படத்தில் குணசித்ர வேடத்தில் நடிக்கிறேன். ஆக, சினிமாவில் நான் படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிறேன்.
மேலும், நான் இப்போது முழுநேர சினிமா நடிகராகி விட்டபோதும், ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான மேடை நாடகங்களில் நடித்து வந்தேன். அப்போது நிலா புகழேந்தி இயக்கிய எங்கே நீதி -என்ற நாடகத்தில் நடித்ததற்காக கருணாநிதியிடம் நகைச்சுவை தென்றல் என்ற விருது பெற்றேன். அதையடுத்து டைரக்டர் கே.பாக்யராஜிடம் அக்கா வீட்டு அட்ரஸ காணோம், சேரனிடம் இனி ஒரு விதி செய்வோம் ஆகிய நாடகங்களில் நடித்தமைக்காகவும் விருது பெற்றிருக்கிறேன். அதன்பிறகு, தனுஷ்கோடி, கங்கா யமுனா சரஸ்வதி உள்பட 10 சீரியல்களில் நடித்த பிறகுதான் சினிமாவுக்கு வந்தேன்.
ஆக, நாடகங்களிலேயே எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து என்னை வளர்த்துக்கொண்ட நான் இப்போது சினிமாவில் எந்தமாதிரியான அழுத்தமான வேடம் கொடுத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்கிறார் நடிகர் கே.பி.சிவா