டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஸ்டுடியோக்களில் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை கிராமத்தை நோக்கி போக வைத்தவர் பாரதிராஜா என்று '16 வயதினிலே' படம் வெளிவந்த நாளிலிருந்து இன்று வரை அனைவருமே சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அதன் பிறகுதான் தமிழ் சினிமாவில் வெளிப்புறப் படப்பிடிப்புகள் அதிகம் நடைபெற்றன. தமிழ் சினிமாவை யதார்த்த சினிமாவை நோக்கிப் பயணிக்க வைத்தவர்களில் பாரதிராஜா முக்கியமானவர். கிராமத்தை நோக்கி நான் போனது ஏன் ?, என்பது பற்றி நேற்று நடைபெற்ற 'கனவு வாரியம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டு பாரதிராஜா பேசினார்.
“கேமராவை கிராமத்துக்கு தூக்கிட்டு வந்தவன்னு என்னை இன்னைக்கு வரை சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அது அல்ல, நான் பார்த்ததை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற வேகம்தான். நான் உதவி இயக்குனரா இருந்த காலத்தில் செட்டுக்குள்ளதான் படமாக்குவாங்க. போரூர்ல இருந்து மாடு கூட்டிட்டு வந்து கட்டி வச்சிடுவாங்க. நம்பியார் டர்பன் கட்டிக்கிட்டு திண்ணைல உட்கார்ந்திட்டிருப்பாரு. ரெண்டு பேரு இப்படியும், அப்படியும் நடந்துக்கிட்டு இருப்பாங்க. எல்லாரும் புதுசா துணி போட்டிருப்பாங்க. ஒரு கட்டைவண்டி நிக்கும். இது எல்லாம் செட்டுக்குள்ள. உள்ளே ஒரே பெயின்ட் வாசனைதான் இருக்கும். அங்க ஒரு புல்லுக்கட்டு இருக்கும்.
அதையெல்லாம் பார்த்து எனக்கு கோபம் வந்துச்சி. அதை எப்படி கிராமம்னு சொல்றது. அந்த கோபத்தோடவே வேலை செய்வேன். பல சமயங்கள்ல என்னை டைரக்டர்ஸ் வெளிய போகச் சொல்வாங்க. அந்த கோபத்துலதான் கேமராவை எடுத்துக்கிட்டு வெளிய போனேன். நாம பார்த்த பட்டாம்பூச்சி, பயிர், ஆறு, மேகம் அதை எல்லாம் காட்டணும்னு தோணுச்சி. அதெல்லாம் அவ்வளவு ஒரு அழகு. கிராம வாழ்க்கை ஒரு அற்புதமான வாழ்க்கை. அதை நம் படத்தில் பதிவு செய்ய வேண்டும். இன்று இருக்கும் கிராமங்கள் நாளை மாறிவிடும். '16 வயதினிலே' படத்தில் பார்த்த கிராமம் 'புதிய வார்ப்புகள்' படத்தில் இருக்காது. கிராமங்களும் மாறிக் கொண்டே இருக்கும். நம் மண்ணை, நம் கிராமத்தை திரைப்படங்களில் பதிவு செய்ய வேண்டும்,” என திரைப்படங்களில் நம் வாழ்க்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்றார் பாரதிராஜா.