டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், அடுக்கடுக்காக பல கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.
அவை வருமாறு:-
"நிம்மதியாய் உறங்கு தமிழகமே... அவர்கள் நமக்கு முன்னால் விழித்து விடுவார்கள். சில வருடங்களுக்கு முன்பு பிப்ரவரி 7-ந் தேதி எனக்கு பிரச்சினைகள் (விஸ்வரூபம் பட சர்ச்சை) ஏற்பட்டன. மக்களின் அன்பு மட்டும் இருந்தால், எந்த சூழ்ச்சியில் இருந்தும் மீண்டு வெற்றி பெறலாம்.
●பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்து சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவதை விடுத்து நாம் குற்றமற்ற கடமை செய்வோம் முடியுமா?.
●தமிழ்நாட்டை தனிநாடாக பிரிக்க வேண்டாம். தமிழ்நாட்டுக்காக இந்தியா அகிம்சை வழியில் போராடும். யாரும் இறக்க மாட்டார்கள். ஆனால் அறியாதவர்கள் உயிரோடு மீள்வார்கள்.
●சத்யராஜ்... பெரியார் பெரியார்னு வாய் கிழிய பேசும் நாம் இந்த நேரத்துல ஒரு டப்மாஷாவது போட வேண்டாமா? நாம் முதலில் மனிதர்கள். பிறகுதான் நடிகர்கள்.
●மாதவன்... நீங்களும் தமிழக பிரச்சினை குறித்து பேசுங்கள். மோசமான அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்கும் நேரம். அதிருப்தியை சத்தமாக சொல்லுங்கள்".இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
●நடிகர் ஆர்யா, தன் ட்விட்டர் பக்கத்தில், "ஓ.பன்னீர்செல்வம் சரியான நேரத்தில் சிறப்பாக துணிச்சலாக பேசி இருக்கிறார். பாராட்டுகள்"என்று கூறியுள்ளார்.
●நடிகர் சித்தார்த் கூறும்போது, "மெரினாவில் ஓ.பி.எஸ். தமிழக அரசியல் உண்மையாகவே Ôகேம் ஆப் த்ரோன்ஸ்Õ மற்றும் Ôஹவுஸ் ஆப் கார்ட்ஸ்Õ சீரியல்களைப்போலவே இருக்கிறது"என்று கூறியுள்ளார்.
●நடிகர் எஸ்.வி.சேகர், "அ.தி.மு.கவில் ஓர் ஆண் மகன். ஒரு பொருளாளர் நீக்கத்தில் பிறந்ததுதான் அ.தி.மு.க. எனும் கட்சி. வரலாறு திரும்புகிறது"என்று கூறியுள்ளார்.
●இசையமைப்பாளர் இமான், "தமிழக அரசியலில் நம்பிக்கை துளிர்விட்டு இருக்கிறது. இதுதான் சிறந்த வழி. சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்து சரியான பேச்சு. நீதி நிலை நாட்டப்பட்டு இருக்கிறது"என்று கூறியுள்ளார்.
●நடிகர் அருள்நிதி, "தமிழக மக்களுக்கு உண்மையை தெரிவித்து நேர்மையாக நடந்து இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். தைரியமான பேச்சு"என்று கூறியுள்ளார்.
●நடிகை குஷ்பு, "ஒரு நாயகன் உதயமாகிறான்"என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டு உள்ளார்.