கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தமிழகத்தில் அசாதாரணமான அரசியல் சூழல் நிலவி வருகிறது என்று ரஜினி சில வாரங்களுக்கு முன்னர் சொல்லியது தற்போது நிரூபணமாகிவிட்டது. முதல்வர் பன்னீர் செல்வம் நேற்று கொடுத்த அதிரடி பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் பற்றி நடிகர் கமல் நேற்று இரவு முதலே டுவீட் செய்ய துவங்கிவிட்டார். ஆனால் அது வழக்கம்போல நேரடியாக அல்ல மறைமுகமாகத்தான் சொல்லியிருக்கிறார்.
கமல் தனது டுவிட்டர் பதிவில்... ‛‛சில வருடங்களுக்கு முன் இதே பிப்ரவரி 7-ம் தேதி தான் விஸ்வரூபம் படம் பல சிக்கல்களுடன் வெளியானது. அந்த நாட்களை நினைவு கூறும் தருணத்தில், மக்கள் கொடுங்கோலுக்கு எதிராக என்றுமே துணையாக நின்று ஆதரவு தெரிவிப்பார்கள். தமிழக மக்களே உறங்கச் செல்லுங்கள். நாளை உங்களுக்கு முன்பாக அவர்கள் எழுந்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
மற்றொரு டுவீட் பதிவில், பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவதை விடுத்து, நாம் குற்றமற கடமை செய்வோம், முடியுமா? இந்தியாவிலிருந்து தமிழகத்தை பிரித்து தனி நாடு ஆக்கிவிடாதீர்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் தமிழகத்திற்காக அகிம்சை வழியில் போராடுவார்கள்.
சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம, இந்த நேரத்துல ஒரு டப்மாஸாவவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர்கள், பிறகு தான் நடிகர்கள். தமிழக பிரச்னை குறித்து பேசுங்கள் நடிகர் மாதவன். நீங்களும் அதிருப்தியை தெரிவிக்கலாம் ஆனால் அதை சத்தமாக கூறுங்கள்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.