மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
பிரகாஷ்ராஜுக்கும் ஜெயராமுக்குமான நட்பு ஆரம்பித்து 'பரமசிவன்' படத்தில் நடித்தபோதுதான்.. அதன்பின் தமிழில் 'சரோஜா' என்கிற படத்தில் இணைந்து நடித்தார்கள்.. இப்போது எட்டு வருடங்கள் கழித்து மலையாளத்தில் 'அச்சாயன்ஸ்' என்கிற படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தில் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். ஜெயராமுக்கு சமீபத்தில் வெளியான 'ஆடுபுலியாட்டம்' என்கிற 100 நாள் வெற்றிப்படத்தை கொடுத்து, சரிந்துகிடந்த அவரது மார்க்கெட்டை உயர்த்தி பிடித்த கண்ணன் தாமரக்குளம் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார்.
அடுத்ததாக பிரகாஷ்ராஜ் தனது கனவுப்படத்தை இயக்கும் ஆரம்பகட்ட வேலைகளில் இருக்கிறார்.. பல வருடங்களாக தனது மனதில் உருப்போட்டு வந்த கதைக்கு உருவம் கொடுக்கும் முயற்சியில் இருந்த பிரகாஷ்ராஜ், இசை சம்பந்தமான அந்த கதையை 'அச்சாயன்ஸ்' ஷூட்டிங்ஸ்பாட்டில் ஜெயராமுடன் பகிர்ந்துகொண்டாராம்.. அப்போதுதான் ஜெயராம் கேரளாவின் பாரம்பரிய வாத்தியமான செண்டை மேளம் வாசிப்பதில் வித்தகர் என்பது பிரகாஷ்ராஜுக்கு தெரியவந்ததாம். அதனால் தான் இருமொழிகளில் அடுத்து இயக்கவுள்ள படத்திற்கு ஜெயராம் தான் பொருத்தமானவர் என அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டாராம் பிரகாஷ்ராஜ். தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக இது தயாராக இருக்கிறதாம்.