தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சூர்யாவின் ‛சி3' திரைப்படத்தை தயாரிப்பாளர் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஹரி-சூர்யா கூட்டணியில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‛சி3' உருவாகியுள்ளது. பலமுறை தள்ளிப்போய் ஒருவழியாக நாளை இப்படம் வெளியாக இருக்கிறது. இதனிடையே சினிமாவிற்கு தற்போது பெரும் தலைவலியாக இருப்பது இணைய பைரசி, அதாவது படம் வெளியாகும் அன்றே படம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவது. இதுதொடர்பாக ஒரு இணையதளம் நேரடியாக சி3 படக்குழுவுக்கு சவாலே விட்டது, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் அந்த இணையதளத்தை ஒழித்து கட்டுவேன் என்று சமீபத்தில் ஆவேசமாய் பேசினார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் ‛சி3' படத்தை வெளியிட கூடாது என சென்னை ஐகோர்ட்டில் ஞானவேல்ராஜா ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கல்யாண சுந்தரம் முன்னிலையில் வந்தது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சி3 திரைப்படத்தை எந்த ஒரு இணையதளத்திலும், தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் யாரும் வெளியிட கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளார்.