Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானமும், சூரியும் எனக்கு பிரமோஷன் கொடுத்துவிட்டனர்!- லொள்ளுசபா சாமிநாதன்

08 பிப், 2017 - 08:54 IST
எழுத்தின் அளவு:
santhanam-and-soori-gave-me-promotion-says-actor-lollusabha-saminathan

நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 35 ஆண்டுகளாகி விட்டது. பெரும்பாலான படங்களில் காமெடியனாகவே நடித்து விட்ட எனக்கு, வி.கே.ராமசாமி, டி.எஸ்.பாலையா, சுருளிராஜன் மாதிரி கதையோடு கலந்த காமெடி காட்சிகளில் நடிக்க வேண்டுமென்ற ஆசை இப்போது ஏற்பட்டுள்ளது என்கிறார் லொள்ளுசபா சாமிநாதன். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


இப்போது நடித்து வரும் படங்கள் பற்றி?


இப்போது பத்து படங்களுக்கு மேல் நடித்துக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக, சந்தானம், சூரி போன்ற நடிகர்களுடன் இதற்கு முன்பு காமெடியனாக மட்டுமே நடித்து வந்தேன். ஆனால் இப்போது என்னை அவர்களுக்கு அப்பா நடிகராக்கி விட்டனர். இதை கூட நான் ஒரு பிரமோஷனாகத்தான் நினைத்துக்கொள்கிறேன். அதேசமயம் என்னை வைத்து காமெடியும் செய்கிறார்கள். அதேபோல் விஜய் ஆண்டனி போன்றவர்கள் என்னை நண்பனாக நடிக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில், இதுவரை காமெடியனாக நடித்து வந்த எனக்கு இப்போது சீரியஸ், செண்டிமென்ட் கலந்த குணசித்ர வேடங்களும் கிடைத்து வருகிறது. அதனால் இப்போது இன்னும் மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்து வருகிறேன்.




உங்களது காமெடி நடிப்புக்கு தீனி போட்ட இயக்குனர்கள் யார் யார்?


பலர் இருக்கிறார்கள் என்றாலும் சுந்தர்.சி, ராஜேஷ்.எம் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் எனக்கு சரியான நடிப்பு தீனி போட்டவர்கள். அவர்கள் படங்களில் நான் செய்த காமெடியை நினைத்து நானே அவ்வப்போது சிரித்துக்கொள்வேன். அவர்களின் கதைகளே காமெடியாக இருப்பதால் எனக்கு அழுத்தமான வேடங்கள் கிடைத்தன.


புதிய காமெடியன்களை உங்களுக்கு போட்டியாக நினைக்கிறீர்களா?


அப்படியெல்லாம் இல்லை. காரணம், நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 35 ஆண்டுகளாகி விட்டது. என்னுடன் நடிக்க வந்தவர்கள் இப்போது இல்லை. எனக்கு பிறகு வந்தவர்களும் இல்லை. ஆனால் நான் மட்டும் ஓடிக்கொண்டேயிருக்கிறேன். எனது பயணத்தில் எத்தனையோ காமெடியன்களை பார்த்து விட் டேன். அப்படி அவர்களுடன் நடித்தபோது நான் யாரையும் போட்டியாக நினைத்ததில்லை. அதேபோல்தான் இப்போது நடிப்பவர்களையும் போட்டி நடிகர் களாக நினைப்பதில்லை. படத்துக்குப்படம் நம்மை நம்பி டைரக்டர்கள் கொடுக்கும் வேடத்தை எப்படி சிறப்பாக செய்வது என்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன். சினிமாவில் 35 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறேன் என்றால் அதுதான் காரணம் என்று கருதுகிறேன்.


தொடர்ந்து காமெடியாக நடிப்பது எப்போதாவது போரடித்துள்ளதா?


காமெடியாக நடிப்பது எனக்கு ஒருபோதும் போரடிக்காது. ஏனென்றால் நான் அதை ரசித்துதான் செய்து வருகிறேன். ஆனால் காமெடியாக நடிப்பது கஷ்டமானது. மக்களை சிரிக்க வைக்க வேண்டும். இல்லையேல் மொக்க போடுறான் என்பார்கள். அதனால் காமெடி காட்சிகளில் நடிக்கும்போது நான் அதிக கவனம் செலுத்துகிறேன். அதேசமயம், அடுத்தபடியாக குணசித்ர வேடங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறேன். நான் கேட்காமலேயே சந்தானம், சூரி போன்ற நடிகர்கள் அவர்களுக்கு அப்பாவாக என்னை நடிக்க வைத்து வருகிறார்கள். அதேசமயம் நான் செண்டிமென்டாக நடித்தபோதும் சில காட்சிகளில் என்னை வைத்தும் காமெடி செய்து விடுகிறார்கள். அவர்களது திறமையைக்கண்டு வியந்து போகிறேன். காமெடி காட்சிகளில் என்னைவிட அவர்கள் சிறப்பாக நடிப்பதாகவே நினைக்கிறேன்.மேலும், சமீபத்தில் நான் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது அந்த ஆட்டோக்காரர், படங்களில் நான் நடித்த காமெடி காட்சிகளை சொல்லிச்சொல்லி சிரித்தார். அதோடு நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் பணமே வாங்க மாட்டேன் என்றார். அதன்பிறகு அவர் கையில் ஒரு ஸ்வீட் பாக்ஸை வாங்கிக்கொடுத்தேன். இந்த மாதிரி ரசிகர்கள் நாம் நடித்த காட்சிகளை ரசித்ததை சொல்லும் போது பெரிய சந்தோசமாக இருக்கும். சோர்ந்த போகிற நேரங்களில்கூட இந்த மாதிரி ரசிகர்களின் பாராட்டு என்னை உற்சாகப்படுத்துகிறது.


காமெடியன்களால் குணசித்ர வேடங்களில் ஸ்கோர் பண்ண முடியுமா?


சிரிக்க வைத்த நாகேஷ் உள்ளிட்ட பல காமெடியன்கள் கண்கலங்கவும் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, வி.கே.ராமசாமி, டி.எஸ்.பாலையா, சுருளிராஜன் போன்ற நடிகர்களெல்லாம் குணசித்ர வேடத்தில் நடித்தாலும் காமெடியையும் கலந்து நடிப்பார்கள். அவர்களது நடிப்பு போரடிக்காது. அதனால் அவர்களது பாணியில் குணசித்ர வேடங்களிலும் காமெடி கலந்து நடிக்க விரும்புகிறேன். எனது இந்த ஆசையை புரிந்து கொண்ட சில டைரக்டர்கள் அதேபோன்ற வேடங் களையும் இப்போது எனக்கு கொடுத்து வருகின்றனர். அதனால், எதிர்காலத்தில் வெறும் காமெடியனாக மட்டுமே இல்லாமல், ஜனரஞ்சகமான குணசித்ர நடிகராக கோலிவுட்டில் வலம் வருவேன் என்கிறார் லொள்ளுசபா சாமிநாதன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in