ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவாஜிராவ் என்கிற ரஜினிகாந்த் பெங்களூரில் பஸ் கண்டக்டராக சில காலம் வேலை பார்த்தது அனைவருக்கும் தெரியும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருச்சியில் பஸ் மெக்கானிக்காக வேலை பார்த்தது பலருக்குத் தெரியாது.
நாடக கம்பெனியில் வேலை பார்த்த சிவாஜி, ஒரு கம்பெனியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகி விட்டார். திருச்சியில் உள்ள தனது வீட்டுக்கு வெறும் கையுடன் திரும்பினார். அம்மா ராஜாமணி, அண்ணன், தம்பி, தங்கைகளை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். இதனால் வீட்டு வறுமையை சமாளிக்க வேலைக்கு போக முடிவு செய்தார்.
நாடக கம்பெனியில் வேலை செய்யும்போது முதலாளியின் கார் டிரைவர் ஒருவர் சிவாஜிக்கு அறிமுகம். அவர் மூலம் கார் ஓட்டவும், சில மெக்கானிக் வேலைகளையும் கற்க வைத்திருந்தார். அதை வைத்து திருச்சியில் இப்போதும் செயல்பட்டு வரும் திருச்சி ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட் (டிஎஸ்டி) என்ற பஸ் கம்பெனியில் தன்னை ஒரு மெக்கானிக் என்று சொல்லி வேலையில் சேர்ந்தார். சில மாதங்கள் வேலை பார்த்தார். அப்போது அவர் வாங்கிய சம்பளம் மாதம் 7 ரூபாய். அதை அம்மாவிடம் கொடுத்து சாப்பாட்டு பிரச்சினையை தீர்த்தார்.
திருச்சிக்கு வந்த அவரது நாடக சபா நண்பர் ஒருவர் "விருதை பிடிக்க வேண்டிய கையில் இப்படி இரும்பை பிடிக்கலாமா? வா உன்னை நல்ல நாடக கம்பெனியில் சேர்த்து விடுகிறேன்" என்று அழைத்தார். ஆனால் ராஜாமணி அம்மாளுக்கு மகனை நாடக கம்பெனிக்கு அனுப்ப மனம் இல்லை. வருகிற 7 ரூபாய் வருமானமும் நின்று விடுமே என்று கவலைப்பட்டார். அந்த நண்பர் அம்மாவை சமாதானப்படுத்தி அழைத்து சென்று தான் நடித்துக் கொண்டிருந்த நாடக கம்பெனியில் சேர்த்து விட்டார். அந்த நண்பர் வேறுயாருமல்ல நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன்.