தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகள் சைப் அலிகான் - கரீனா கபூர். சமீபத்தில், நடிகை கரீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தைமூர் அலிகான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த பெயர் கொடுங்கோல் மன்னனின் பெயர். இந்த பெயருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சைப் அலிகான் கூட கோபம் அடைந்தார். தங்கள் விருப்பம் போல் தான் குழந்தைக்கு பெயர் வைப்போம் என்று கூறியிருந்தார். ஆனால், இதுப்பற்றி நடிகை கரீனா எதுவும் பேசாமல் இருந்து வந்த நிலையில் இப்போது முதன்முறையாக பேசியிருக்கிறார்.
சமீபத்தில் கரீனா அளித்த பேட்டி ஒன்றில் தன் மகன் பெயர் குறித்து பேசினார். அவர் பேசுகையில், எதற்காக எங்களது மகனின் பெயரை இவ்வளவு பெரிய பிரச்னை ஆக்குகிறார்கள் என்று தெரியவில்லை. அழகான பெயர், எங்களுக்கு பிடித்திருக்கிறது வைத்திருக்கிறோம். இந்த பெயர் யாரை குறிப்பிடுகிறது என்று தெரியவில்லை. இந்த பெயருக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள், அந்த ஆதரவே இந்த எதிர்ப்பை எல்லாம் சரிகட்டும் என்று கூறியுள்ளார்.