சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தாமிரா இயக்கத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா இணைந்து நடித்த படம் ரெட்டைச்சுழி. இந்த படத்தில் இளவட்ட நாயகனாக அறிமுகமானவர் ஆரி. அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். அதன்பிறகு மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, மாயா, உன்னோடு கா ஆகிய படங்களில் நடித்த அவர், தற்போது நாகேஷ் திரையரங்கம், கடை எண் 6 என சில படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2015ம் ஆண்டு ஆரிக்கும், நதியா என்ற இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 4-ந் தேதி ஆரி-நதியா தம்பதியினருக்கு லண்டனில் பெண் குழந்தை பிறந்துள்ளது. சேதியறிந்து நாகேஷ் திரையரங்கம் படப்பிடிப்பில் இருந்த ஆரி, லண்டன் சென்றிருக்கிறார்.
சமீபத்தில், மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களோடு இளைஞராக ஆரியும் கலந்து களத்தில் இறங்கி போராடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.