திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் கூடி முடிவெடுத்த இந்த முடிவுக்கு அதிமுக.,வின் உண்மையான விசுவாசிகள் யாரும் ஆதரிக்கவில்லை. மேலும் சசிகலாவை முதல்வராக ஏற்க மக்களும் தயாராக இல்லை. தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு குரல் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ‛முதல்மரியாதை' பட புகழ் நடிகை ரஞ்சனி, சசிகலா தமிழக முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது... தமிழக மக்களுக்காக நான் குரல் கொடுக்கிறேன். சசிகலாவை போய் எப்படி முதல்வராக ஏற்பது. அம்மாவிடம் பணிப்பெண்ணாக இருந்தார் என்பதை தவிர அவருக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது. தமிழக மக்கள் முட்டாள் என மன்னார்குடி மாபியா நினைக்கிறதா...? இதை எதிர்த்து கண்டிப்பாக தமிழக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விஷயத்தில் இளைஞர்களின் சக்தியை உலகம் பார்த்துள்ளது.
அதிமுக., கட்சி மறைந்த நடிகரும், முதல்வருமான எம்ஜிஆர்-ல் துவக்கப்பட்டது, அதன்பின்னர் ஜெயலலிதா பொறுப்பேற்றார். சசிகலா முதல்வராக பதவியேற்பதை தமிழ் மக்கள் தான் தடுத்து நிறுத்த வேண்டும். அதிமுக.,வை காப்பாற்ற வேண்டும். முக்கிய பதவிக்கு வருபவர்கள் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் கடைசிநாளில் யாரையும் பார்க்க விடாமல் சசிகலா எப்படி தடுத்தார் என அனைவருக்கும் தெரியும். தமிழகத்தை கடவுள் காப்பாற்ற வேண்டும். ஆட்சி கவிழ்ப்பு குறித்து ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.
இவ்வாறு நடிகை ரஞ்சனி காட்டமாக கூறியுள்ளார்.