பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இந்தப் படத்தை காப்பாற்றுவதற்காக தனக்கு பேசப்பட்ட 7 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். அது பற்றிய விபரம் வருமாறு...
ராகவா லாரன்ஸ் காஞ்சனா 2 படத்திற்கு பிறகு வேந்தர் மூவீசுக்கு 2 படங்கள் நடித்து தருவதாக ஒப்புக் கொண்டு இரண்டு கோடி ரூபாய் முன் பணம் வாங்கினார். இந்த நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி ராகவா லாரன்சை அழைத்து "நான் பட்டாஸ் என்ற தெலுங்கு படத்தின் உரிமத்தை வாங்கியிருக்கிறேன். அதை தமிழில் தயாரிக்கிறேன். நீதான் நடித்து தரவேண்டும்" என்று கூறினார். தன்னை அற்புதம் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் என்ற நன்றி கடனுக்காக ஒப்புக் கொண்ட ராகவா லாரன்ஸ் "முதல் காப்பி அடிப்படையில் நீங்கள் தயாரியுங்கள் படத்தின் வியாபரத்தை வேந்தர் மூவீஸ் பார்த்துக் கொள்ளும்" என்று கூறினார். அதற்கு ஆர்.பி.சவுத்ரியும் ஒப்புக் கொண்டார். வேந்தர் மூவீசுக்கு கொடுக்கப்பட்டிருந்த மொட்ட சிவா கெட்ட சிவா டைட்டிலுடன் படம் தயாரானது.
படம் தயாராகும் நேரத்தில்தான் வேந்தர் மூவீஸ் மதன் "காசிக்கு போகிறேன். கங்கையில் சமாதியாகிறேன்" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார். இதனால் பேசியபடி சூப்பர் குட் பிலிம்சுக்கு பணம் வரவில்லை. அதனால் அவர் கடன் வாங்க வேண்டியதாயிற்று. பின்னர் மதனை மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர். மதனால் பாதிக்கப்பட்டவர்கள் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை வெளியிடுவதற்கு தடை போட்டனர். இதனால் படம் தயாராகியும் 8 மாதங்கள் வரை வெளியிட முடியாமல் இருந்தது.
பலருக்கு பணம் செட்டில் பண்ணிவிட்டுத்தான் ரிலீஸ் செய்ய வேண்டிய நிலை. அதற்கு பல கோடி தேவை. இந்த பிரச்சினையை அம்மா கிரியேஷன் சிவா, ராகவா லாரன்சிடம் தெரிவித்தபோது "எனக்கு பணம் முக்கியமில்லை. என் படம் என் ரசிகர்களுக்கு போனால் போதும் எனது சம்பளத்தை விட்டுத் தருகிறேன் மற்றதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார். (இந்த படத்திற்கு லாரன்சுக்கு பேசப்பட்ட சம்பளம் 7 கோடி என்று கூறப்படுகிறது). லாரன்சை தொடர்ந்து பலரும் படத்துக்கு உதவிக்கு வந்தார்கள். திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் இதில் தலையிட்டு சிலருக்கு பணம் செட்டில் செய்து, சிலருக்கு கியாரண்டி கொடுத்து படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்துள்ளனர். படம் 17ந் தேதி வெளியாகி வசூலை அள்ளிக் கொடுக்குமானால் அத்தனை பிரச்சினையும் இரண்டு நாளில் முடிவுக்கு வரும்.