ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில், எஸ்.ஜே.சூர்யா நடிக்க நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ரெஜினா, நந்திதா இருவரும் நடித்துள்ளனர். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள முதல் பேய் படமான நெஞ்சம் மறப்பதில்லை பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது. பேய்ப்படம் என்றால் நிச்சயமாக ஒரு பங்களா இருக்கும். அதன்படி இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஈ.சி.ஆரில் உள்ள ஒரு பங்களாவில் நடைபெறுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதுசரி.. நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் கதை என்ன? எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியான நந்திதாவுக்கு முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக கணவருக்கு தாம்பத்ய சுகத்தைக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார். அதனால் வருத்தத்தில் இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் பார்வை வீட்டு வேலைக்காரியான ரெஜினா பக்கம் திரும்புகிறது. ஒருகட்டத்தில் அவருக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட்டாக ரெஜினா கர்ப்பமாகிறார். விஷயம் வெளியே தெரிந்தால் பிரச்சனையாகும் என்பதால் அவரது கர்ப்பத்தை கலைக்கச்சொல்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த பஞ்சாயத்தினால் எதிர்பாராதவிதமா ரெஜினா இறந்துபோகிறார்.
இறந்துபோன ரெஜினா, ஆவியாக வந்து எஸ்.ஜே.சூர்யா அண்ட் ஃபேமிலியை என்ன பாடுபடுத்துகிறார் என்பதுதான் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் கதை. விரைவில் தணிக்கைக்கு செல்ல இருக்கிறது நெஞ்சம் மறப்பதில்லை படம்.