தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்ப்படம் படத்தை இயக்கிய டைரக்டர் சி.எஸ்.அமுதன் ரெண்டாவதாக இயக்கும் படத்திற்கு "ரெண்டாவது படம்" என்று பெயர் சூட்டியிருக்கிறார். முதல் படத்திற்கு தமிழ்ப்படம் என்று பெயர் சூட்டி வரவேற்பை பெற்ற அமுதன், ரெண்டாவது படத்திற்கு "ரெண்டாவது படம்" என பெயர் சூட்டி மீண்டும் வரவேற்பை பெற்றிருக்கிறார். தமிழில் வெளிவந்த படங்களைக் கிண்டல் அடித்து வெளிவந்தது தமிழ் படம். மிர்ச்சி சிவா, திஷா பாண்டே நடிக்க, அமுதன் இயக்கி இருந்தார். க்ளவுட் நைன் நிறுவனம் தயாரித்திருந்தது. ரஜினி, கமல், பாக்யராஜ் என ஒருவரை விடாமல் கிண்டலடித்த இந்தப் படம் ஓஹோவென ஓடியது.
இந்நிலையில் இவரது இரண்டாவது படத்துக்கு தலவலி என்று பெயரிட்டிருப்பதாகவும், இதில் அஜீத், விஜய்யை கிண்டலடித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் அந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது. இப்போது தனது இரண்டாவது படத்துக்கு ரெண்டாவது படம் என்றே பெயரிட்டுள்ளார் அமுதன். இப்படத்தில் விமல், அரவிந்த், ரிச்சர்ட் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்கிரீன் க்ராப்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்க, விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளிவரும் இந்தப் படம் விஞ்ஞானமும், சரித்திரமும் இணைந்த காதல் படம் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.