தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல இந்திப் பட இயக்குனர் பைசல் சயீப் இயக்கி வந்த படம் அம்மா. இதில் ராகினி திவேதி அம்மாவாக நடித்தார். பிரசாந்த் நாராயணன், ராஜ்பால் யாதவ் உள்ளிட்ட பலர் நடித்தனர். 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்தை டிராப் செய்து விட்டார் இயக்குனர் பைசல் சயீப்.
அம்மா படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேரடியாக அவர் கதை இல்லையென்றாலும் அவர் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களின் சாயலில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில் படத்தை நிறுத்தி விட்டார் பைசல். "தொடர்ந்து வரும் மிரட்டல்களால் தயாரிப்பாளர் படத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டார். இது ஜெயலலிதாவின் கதையோ, அவரை விமர்சிக்கும் படமோ இல்லை என்று எத்தனை முறை சொன்னாலும் யாரும் நம்புவதாக இல்லை" என்று இயக்குனர் பைசல் சயீப் தெரிவித்திருக்கிறார்.