கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாலிவுட்டையும் கடந்து ஹாலிவுட் சென்றுவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது நடிகர் டுவைன் ஜான்சன் உடன் இணைந்து ‛பேவாட்ச்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து பாலிவுட்டில் ஒரு படம் கமிட்டாகியிருக்கிறார். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தை இயக்க உள்ளார். தற்போது பத்மாவதி படத்தை எடுத்து வரும் பன்சாலி, இதைத்தொடர்ந்து ஒரு நாவலை மையமாக வைத்து பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் நடிகை பிரியங்கா சோப்ரா தான் முக்கியமான ரோலில், அதுவும், பாலியல் தொழிலாளியாக நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக பிரியங்காவிடம் பேசிவிட்டதாகவும், அவரும் சம்மதம் சொல்லி கால்ஷீட் வழங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.