பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் கோவிந்தா. காமெடி கலந்த இவரது ஹீரோயிசம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருந்தவர், இப்போது மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கிறார். சீரியஸ் வேடங்களில் நடித்த தன்னை காமெடி ரோலுக்கு மாற்றியவர் திலீப் என்று கோவிந்தா கூறியுள்ளார்.
இதுப்பற்றி கோவிந்தா மேலும் கூறியிருப்பதாவது... ‛‛என்னுடைய ஹீரோ திலீப் குமார் தான். அவரை எப்போதும் பின் தொடருகிறேன். ஹீரோ என்றால் சீரியஸான வேடங்களில் தான் நடிக்கணும் என்று ஒருகாலத்தில் எண்ணினேன். அப்படி நான் சீரியஸாக நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. ஒரு முறை திலீப் குமாரை சந்தித்தேன், அவர் தான் என்னை காமெடி கலந்த வேடங்களிலும் நடிக்க அறிவுறுத்தினார். அப்படி நான் நடித்த காமெடி கலந்த ஹீரோ படங்கள் என்னை வெற்றி நடிகனாக்கியதால் அதன்பின்னர் காமெடியிலும் நடிக்க தொடங்கினேன்'' என்று கூறியுள்ளார்.
கோவிந்தா, தற்போது ‛ஆ கயா ஹீரோ' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 3ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.