பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான மாபெரும் வெற்றிபடமான ‛தங்கல்'-ஐ இயக்கியவர் நிதேஷ் திவாரி. இவர் அடுத்தப்படத்தை இயக்க தயாராகி வருகிறார். சமீபத்தில் நிதேஷ் அளித்த பேட்டியில் தன்னால் எல்லா விதமான படங்களையும் இயக்க முடியும் என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது... ‛‛சினிமா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இந்தமாதிரி தான் படம் இயக்க வேண்டும் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் நான் இல்லை. என்னால் எப்படிப்பட்ட படத்தையும் இயக்க முடியும். ஹாரர் படங்களை கூட இயக்குவேன். இயக்குநராக நிரூபிக்க வேண்டும் என்பதற்காக நான் படம் இயக்கவில்லை, ரசிகர்களுக்காக படம் இயக்குகிறேன். என்னுடைய படங்கள் சமூக செய்தியுடன் கூடிய பொழுதுபோக்கு படங்களாக இருந்தாலே போதும்'' என்று கூறியுள்ளார்.