பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இன்று யாரை வம்பிற்கு இழுக்கலாம் எனும் எண்ணத்தோடு தனது டுவிட்டர் பக்கத்தில் நுழையும் ராம் கோபால் வர்மா, எப்பொழுதும் டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தை தனது பொது எதிரியாகக் கொண்டுள்ளார். ராம் கோபால் வர்மாவின் கமென்ட்டுகளை கண்டுகொள்ளாமல் செல்லும் மெகா குடும்பம் இம்முறை ராம் கோபால் வர்மாவிற்கு சரியான பதில் கொடுத்தனர். நாகபாபு, சிரஞ்சீவி, பவன் கல்யாண் என பலரும் ராம் கோபால் வர்மாவின் கமென்ட்டிற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா ராம் கோபால் வர்மாவிற்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ராம் கோபால் வர்மாவின் கமென்ட்டுகளை எப்பொழுதுமே நகைச்சுவையாக எடுத்துக்கொள்வோம் என கூறியுள்ள சுஷ்மிதா, பேச்சு சுகந்திரம் எல்லோருக்கும் உண்டு அதனை தவறான வழியில் பயன்படுத்துபவர்கள் சமூக வலைதளங்களை துறக்க நேரிடும் என மறைமுகமாக எச்சரித்துள்ளார். சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 படத்தில் தந்தைக்கு ஸ்டைலிஸ்டாக சுஷ்மிதா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.