ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அம்மு ராமச்சந்திரன். அதையடுத்து வெங்கட்பிரபுவின் சரோஜா படத்தில் நடிக்கத் தொடங்கி மந்திர புன்னகை, மரியாதை, ஆனந்த தாண்டவம் உள்பட பல படங்களில் சாப்ட்டான கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால் தற்போது மலையாளத்தில் அஜீத் நம்பியார் இயக்கும் ஒரு மலையாளம் கலர் படம் -என்ற படத்தில் கேங்லீடராக நடிப்ப தாக சொல்கிறார் அம்மு.
அந்த படம் குறித்து அவர் கூறுகையில், ஒரு மலையாள கலர் படம் என்ற படத்தில் நடிக்க என்னை அழைத்தபோது கேரக்டர் பற்றி எதுவும் சொல்ல வில்லை டைரக்டர் அஜீத் நம்பியார். ஸ்பாட்டுக்கு சென்றபிறகுதான் கதையையும், அந்த கேங்லீடர் கேரக்டரை பற்றியும் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். நிஜத்தில் சாப்ட்டான பெண்ணான நான் படங்களிலும் அப்படித்தான் நடித்திருக்கிறேன். எனது தோற்றமும் அப்படித்தான் உள்ளது. அப்படியிருக்க, நான் போய் எப்படி வில்லியாக நடிப்பது என்று தயங்கினேன்.
ஆனால் அவரோ, இதில் கதைப்படி ஒரு அழகான வில்லி வேண்டும். அதற்கு நீங்கள்தான் பொருத்தமாக இருப்பீர்கள் என்று சொன்னார். அதன்பிறகு அவர் கதையை சொல்லத் தொடங்கினார். அவர் சொல்லச்சொல்ல எனது மைண்டில் ஒரு வில்லி கேரக்டர் ஓடத்தொடங்கியது. அதன்பிறகு அதை உள்வாங்கி நடிக் கத் தொடங்கினேன். அதோடு, எனது மைண்டில் ஓடிய வில்லியை மனதில் எடுத்துக்கொண்டு நான் நடித்ததால், எந்த நடிகைகளின் சாயலும் வராமல் ஒரு புதுமையான வில்லியாக நடித்தேன். நான் நடித்ததை மானிட்டரில் பார்த்துபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதையடுத்து, இந்த படம் எனது கேரியரில் திருப்புமுனையாக அமையும் என்ற பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மேலும், குக்கூ படத்தில் மாளவிகா நாயரின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அதோடு மாற்றுத்திறனாளி வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக எல்லாவிதமான சவாலான வேடங்களில் நடித்து சினிமாவில் நல்லதொரு அங்கீகாரம் பெற வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய நோக்கமாகியிருக்கிறது. மேலும், இப்போது மலையாளத்தில் நடித்து வரும் இந்த படத்திற்கு பிறகு என்னை வழக்கமான கோணத்தில் இருந்து மாறுபட்ட கோணங்களில் யோசித்து, அழுத்தமான கேரக்டர்களில் தமிழ் டைரக்டர்களும் நடிக்க வைப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் அம்மு ராமச்சந்திரன்.