மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
சுசீந்திரன் இயக்கிய முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு. இந்த படத்தில் யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்த சரண்யா மோகன் நாயகியாக நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டான பிறகு பல படங்களில் நடித்த சரண்யாமோகன் முன்னணி நடிகை இடத்தைப் பிடிக்காமலேயே திரு மணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்நிலையில், தற்போது வெண்ணிலா கபடிக்குழு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு சுசீந்திரன் கதை வசனம் எழுத, அவரது சித்தப்பா செல்வ சேகரன் படத்தை இயக்கி வருகிறார்.
மேலும், இப்படத்தில் நாயகனாக விக்ராந்த் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிப்ப தற்காக சரண்யா மோகன் சாயலில் நடிகை தேடி வந்தனர். அப்போது அவர்கள் கண்ணில் சிக்கிய நடிகைதான் அர்த்தனா. இவரும் கிட்டத்தட்ட சரண்யா மோகன் சாயலில்தான் இருக்கிறார். அதோடு இவரும் கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்தானாம். அதோடு, இதற்கு முன்பு, தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நடித்துள்ள இந்த அர்த்தனா, நடிப்பில் படு சுட்டியாக இருப்பதை கேள்விப்பட்டு, டைரக்டர் சமுத்திரகனி தனது தொண்டன் படத்திற்கும், பாண்டிராஜ் தனது சம்பா படத்திற்கும் நாயகியாக புக் பண்ணியுள்ளனர். ஆக, வந்த வேகத்தில் மூன்று மெகா படங்களை கைப்பற்றி கோலிவுட்டின் இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் அர்த்தனா.