பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
‛நான் ஒரு நடிகன் என்பதைவிட ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பேசினார்.
சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ‛தெய்வீக காதல் என்னும் ஆன்மீக புத்தக வெளியீட்டு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பேசியதாவது:
மனிதப்பிறவியே அபூர்வம். நான் யார்? எங்கிருந்து வந்தேன்? கடவுள் யார்? ஆத்மா என்பது என்ன? என்ற கேள்விகள் வருவதே ரொம்ப அபூர்வம். அந்த மாதிரி கேள்விகள் வந்த பின்னர் அதற்கு விடை கொடுப்பதற்கு குரு அமைவது அதைவிட அபூர்வம். குரு கிடைத்து அவருடைய போதனைகள் கிடைப்பது அதைவிட அதைவிட அபூர்வம்.
நான் ஒரு சினிமா ஸ்டார் என்று சொல்லிக்கொள்வதை விடவும், நான் ஒரு ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொள்வதில் ரொம்ப பெருமைப்படுகிறேன். பணம், புகழ் ஒரு பக்கம் வைத்து ஆன்மீகம் ஒரு பக்கம் வைத்தால் நான் ஆன்மீகம் இருக்கும் பக்கம்தான் போவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் ஆன்மீகத்திற்கு அவ்வளவு பவர் இருக்கு. நான் 'பவரை' கொஞ்சம் விரும்புபவன்.
எனது முதல் குரு என் அண்ணன் சத்தியநாராயணன். அவர்தான் என்னை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தியது. ராமகிருஷ்ணா பரமஹம்சர் என்னுடைய இரண்டாவது குரு. ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். ராகவேந்திரா ஆசிரமத்தில் நான் பக்தியை கற்றுக்கொண்டேன். ரமண மகரிஷியிடம் நான் யார் என்று கேள்வி எழுப்புவதை கற்றுக்கொண்டேன். தயானந்த சரஸ்வதியிடம் சமூக பிரச்சனைகளை தெரிந்துகொண்டேன். வேதத்தில் உள்ள சில நுணுக்கங்களை தெரிந்துகொண்டேன். சச்சிதானந்தர்தான் எனக்கு உபதேசம் செய்தவர்.