தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் ஹன்சிகாவின் மார்க்கெட் ஏறக்குறைய கடைசிகட்டத்தில் இருக்கிறது. தற்போது இரண்டாம்நிலை ஹீரோக்களுடன் நடிக்க தயாராகிவிட்டார் ஹன்சிகா. ஜி.வி.பிரகாஷ்குமார் உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் ஹன்சிகா. இதற்கிடையில், தமிழில் மார்க்கெட் போய்விட்டால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்த ஹன்சிகா தற்போது தன் கவனத்தை மலையாளப்பக்கம் திருப்ப ஆரம்பித்திருக்கிறார்.
'ஒப்பம்', 'புலி முருகன்', 'முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்' என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்துவரும் மோகன்லால் அடுத்து ஏற்கெனவே மோகன்லாலை வைத்து சில மலையாள படங்களை இயக்கிய பி.உன்னிகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்! 'லிங்கா' தயாரிப்பாளர் 'ராக்லைன்' வெங்கடேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் மோகன்லாலுடன் விஷாலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்போது இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஹன்சிகாவும் நடிக்க இருக்கிறார். இதை படத்தின் இயக்குனர் பி. உன்னிகிருஷ்ணன் உறுதி செய்துள்ளார்.
இது ஹன்சிகா நடிக்கும் முதல் மலையாள படம். தமிழ்ப்படங்களில் நடிக்க ஒன்றரை கோடி சம்பளம் வாங்கி வந்த ஹன்சிகா தற்போது 70 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் மலையாளப் படத்தில் நடிக்க அவர் வாங்கி இருப்பது 30 லட்சம்தான். மலையாள சினிமாவின் வியாபார வட்டம் சிறியது, அதன்காரணமாக ஹன்சிகாவின் சம்பளமும் குறைக்கப்பட்டுள்ளது.