விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
தமிழ்த் திரையுலகத்தில் இன்றைய முன்னணி வியாபார நடிகர்களில் சிவகார்த்திகேயன் முக்கிய இடத்தில் உள்ளார். விஜய் டிவியில் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றார். பின்னர் அங்கேயே நிகழ்ச்சித் தொகுப்பாளராக சில வருடங்கள் பணிபுரிந்து முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தார்.
2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'மெரினா' திரைப்படம் மூலம் நாயகனாக திரையுலகத்தில் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி நேற்றுடன் 5 வருடங்கள் நிறைவடைந்தது. இந்த 5 வருடங்களில் அவருடைய வளர்ச்சி பலரையும் வியக்க வைத்த ஒன்றாக இருக்கிறது. தனது தனிப்பட்ட திறமையால் முயன்று முன்னேறி வாரிசு நடிகர்கள் பலரைக் காட்டிலும் உயர்ந்து நிற்கிறார் என திரையுலகத்தில் உள்ளளவர்களே பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
தன்னுடைய 5 வருட பயணம் குறித்து நேற்று அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். “பிப்ரவர் 3, 2012, பெரிய திரையில் என்னைப் பார்த்தேன். பல அனுபவங்களுடன் இந்த ஐந்து வருடங்கள் அற்புதமாகக் கடந்திருக்கிறது. நீங்கள் கொடுத்த இப்படி ஒரு வாழ்க்கையை கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. என்னுடைய சகோதரர்கள், சகோதரிகள், என்னுடைய அனைத்துப் படக்குழுவினர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், அனைத்து நட்சத்திரங்கள், ரசிகர்கள், மீடியா, திரைப்பட ரசிகர்கள் என எனக்கு பெரிய ஆதரவையும், அன்பையும் கொடுத்த அனைவருக்கும் நன்றி.
இந்தப் பயணத்தை ஆரம்பித்து வைத்த பாண்டிராஜ் சாருக்கு சிறப்பு நன்றி. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று எனக்கும் தெரியும். இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறேன், எப்போதும் கற்றுக் கொள்வேன். பொழுதுபோக்கான படங்களைக் கொடுக்க என்னாலான முயற்சிகளைச் செய்வேன். மீண்டும் ஒரு நன்றி, உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் மீது சில தயாரிப்பாளர்கள் கொடுத்திருந்த புகாருக்கான பிரச்சனைகளும் தீர்ந்துவிட்டது என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். விரைவில் அந்த இரண்டு தயாரிப்பாளர்களின் படங்களிலும் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளாராம் என்பது இன்று கிடைத்த கூடுதல் தகவல்.