ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எஸ்.ஜே.சூர்யா-நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்த கள்வனின் காதலி படத்தை தயாரித்தவர் லட்சுமண். அவர்தான் ஜெயம்ரவி -ஹன்சிகா நடித்து வெளியான ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கியிருக்கிறார். கள்வனின் காதலி படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் பின்னர் படம் தயாரிப்பதில் இருந்து விலகி கதைகள் ரெடி பண்ணி ஸ்கிரிப்ட் எழுதிய லட்சுமன் பல நடி கர்களை தேடிச்சென்று கதை சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் தயாரிப்பாளர் என்பதால் அவர் மீது யாருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லையாம். அதன்பிறகுதான் ஜெயம்ரவியிடம் ரோமியோ ஜூலியட் கதையை சொல்ல, அவர் ஓகே சொல்லி நடித்திருக்கிறார். அப்படி அவர் இயக்கிய முதல் படமே வெற்றி பெற்றதால், அடுத்தபடியாக போகன் படத்தை இயக்கினார். அந்த படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும், ரோமியோ ஜூலியட் படத்திற்கு பிறகும் ஜெயம்ரவியை இயக்க லட்சுமண் விரும்பியபோது, வேறு யாராவது பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்குங்கள் என்றுதான் அவரை துரத்தினாராம் ஜெயம்ரவி. ஆனால் அவர் விடாமல் பின்தொடர்ந்து போகன் கதையை சொல்லியிருக்கிறார். ஆனால் கதை வித்தியாசமான இருந்ததால் நடிக்க சம்மதித்துள்ளார் ஜெயம்ரவி. அதோடு, இந்த போகன் கதையை நான் ஐந்தாவது படமாக இயக்க வைத்திருக்கிறேன் என்று லட்சுமண் சொல்ல, நல்ல கதைகளை முதலில் படமாக்குங்கள் என்று சொல்லி போகனை இயக்க வைத்திருக்கிறார்.
அதோடு, போகன் படத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ள வேடத்தில் முதலில் விஜயசேதுபதியைத்தான் ஒப்பந்தம் செய்ய நினைத்தாராம் லட்சுமண். ஆனால் அந்த வேடம் அரவிந்த்சாமிக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று அவரை ஒப்பந்தம் செய்ய சொல்லியிருக்கிறார் ஜெயம்ரவி.