ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாண்டவர்பூமி படத்தில் அவரவர் வாழ்க்கையில், தோழா தோழா, சாமி படத்தில் கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா உள்பட பல ஹிட் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் சினேகன். யோகி படத்தில் அமீரின் நண்பராக நடித்தவர், பின்னர் உயர்திரு-420 படத்தில் நாயகனாகவும் நடித்தார். தற்போது பொம்மி வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதுபற்றி சினேகன் கூறுகையில், சினிமாவில் பாடலாசிரியராக எனக்கென ஒரு இடம் கிடைத்த பிறகு, யோகி படத்தில் நடிகரானேன். இப்போது பொம்மிவீரன் படத்தில் நடித்து வருகிறேன். மதுரையை களமாகக்கொண்ட கதை. வித்தியாசமான ஹாரர் படம். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. மேலும், நான் நடிக்க வந்து விட்ட பிறகு பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டாதது போன்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் போலவே பாடல் எழுதுவதில் அதிகமான ஆர்வம் காட்டி வருகிறேன். இப்போதுகூட 15 படங்களுக்கு பாடல் எழுதுகிறேன். யுவன் ஷங்கர் ராஜா, ஹிப்ஹாப் தமிழா ஆதி என முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் எழுதி வருகிறேன்.
மேலும், என்னைப்பொறுத்தவரை பாடல், நடிப்பு என்பதை பிரித்துப்பார்க்க முடியாது. இரண்டுமே சினிமா சார்ந்த விசயங்கள் தான். அதோடு நடிப்பதை காரணம் காட்டி எந்த படத்திற்கும் பாடல் கொடுக்க நான் தாமதம் செய்ததில்லை. சொன்ன நேரத்தில் சொன்னபடி எழுதிக்கொடுத்து விடுகிறேன். அதேசமயம் தரமான பாடல்களை எழுதியும் சமீபகாலமாக நான் எழுதிய பாடல்கள் எதிர்பார்த்தபடி ஹிட்டடிக்காதது மனதளவில் வருத்தமாகவே உள்ளது என்று கூறும் சினேகன், பொம்மி வீரன் படம் மூலம் நான் ஹீரோவாகவும் பெரிய அளவில் வெற்றி பெறுவேன் என்கிறார்.