'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ஒரு முதல்வரின் மரணத்தில் உள்ள சந்தேகத்தையும் தெரிந்து கொள்ள தெருவில் இறங்கி போராட வேண்டுமா...? என்று பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாக கடந்த டிச.,5ம் தேதி காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணத்தில் உள்ள மர்மங்களை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நடிகை கவுதமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் இந்த கடிதம் தொடர்பாக பிரதமரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. தனது கேள்விக்கு பிரதமர் ஏன் பதிலளிக்கவில்லை என்று கேட்டுள்ளார் நடிகை கவுதமி.
இதுதொடர்பாக நடிகை கவுதமி சற்று காட்டமாக கூறியிருப்பதாவது... முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகத்திற்கு டிசம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினேன். சமூக வலைதளங்களிலும், மீடியாவிலும் இந்த செய்தி பலராலும் பகிரப்பட்டது. ஆனால் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மோடிக்கு இது தெரியாமல் போனது ஏன்.? நான் எழுதிய கடிதம் நேரடியாகவும் மீடியா வழியாகவும் தெரிந்த பிறகும் கூட, அதற்கான பதிலை பிரதமரோ, அவரது அலுவலகமோ இது வரை தெரிவிக்கவில்லை.
ஜனநாயக முறைப்படி இந்த நாட்டின் குடிமகன் என்ற உரிமையில் ஜெயலலிதாவின் மரணத்தை பற்றிய சந்தேகத்தை பிரதமருக்கு தெரிவித்திருந்தேன். லட்சக்கணக்கான மக்களுக்கு தெரிந்த அந்தக்கடிதம், பிரதமரின் பார்வைக்கு போகாதது, குடிமகனாகிய நம்மை சூறையாடுவதற்கு சமம். பிரதமரை நான் பெரிதும் மதித்தேன், அனைத்து குடிமகன்கள் அவருக்கு முன் சமம் என்றால் என்னுடைய கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் புறக்கணிப்பது ஏன்.? தமிழகம் அனைத்து விதத்திலும் மத்திய அரசால் புறக்கப்படுகிறதோ என்று எண்ண தோன்றுகிறது.
ஜெலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பலரும் அவரை சென்று பார்த்தனர். ஆனால் அவரது உடந்நிலைப்பற்றி ஒருவருக்கும் உண்மை தெரியவில்லை. ஜெயலலிதா மறைவு, வர்தா புயல் என தமிழக மக்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளார்கள். விவசாயிகள் மடிந்து கொண்டிருக்கிறார்கள், கலாச்சாரத்தை மீ்ட்க கூட போராட வேண்டியிருக்கிறது. இந்தமாதிரி சூழலில் மத்திய அரசுக்கு தமிழக மக்களுக்கு உறுதுணையாகவும், அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஏதாவது செய்யும் என்று நினைத்தோம், ஆனால் எதற்குமே பதில் கிடைக்கவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது குடிமகனுக்கு நாட்டில் எந்த பாதுகாப்பும் இல்லை என்று தானே அர்த்தம். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மர்மமான முறையில் இறந்திருக்கிறார், அதை ஒளிவு மறைவு இன்றி தெளிவுப்படுத்த வேண்டாமா...?, ஒரு முதல்வரின் மரணத்தில் உள்ள சந்தேகத்தையும் தெரிந்து கொள்ள தெருவில் இறங்கி தான் போராட வேண்டுமா...?
இவ்வாறு நடிகை கவுதமி கூறியுள்ளார்.