Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெ.,வின் மரணத்திற்கும் தெருவில் இறங்கி போராட வேண்டுமா...? - மோடிக்கு கவுதமி கேள்வி

04 பிப், 2017 - 12:07 IST
எழுத்தின் அளவு:
Jayalalitha-Dead---Gautami-questioned-to-PM-Modi

ஒரு முதல்வரின் மரணத்தில் உள்ள சந்தேகத்தையும் தெரிந்து கொள்ள தெருவில் இறங்கி போராட வேண்டுமா...? என்று பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாக கடந்த டிச.,5ம் தேதி காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணத்தில் உள்ள மர்மங்களை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நடிகை கவுதமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் இந்த கடிதம் தொடர்பாக பிரதமரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. தனது கேள்விக்கு பிரதமர் ஏன் பதிலளிக்கவில்லை என்று கேட்டுள்ளார் நடிகை கவுதமி.


இதுதொடர்பாக நடிகை கவுதமி சற்று காட்டமாக கூறியிருப்பதாவது... முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகத்திற்கு டிசம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினேன். சமூக வலைதளங்களிலும், மீடியாவிலும் இந்த செய்தி பலராலும் பகிரப்பட்டது. ஆனால் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மோடிக்கு இது தெரியாமல் போனது ஏன்.? நான் எழுதிய கடிதம் நேரடியாகவும் மீடியா வழியாகவும் தெரிந்த பிறகும் கூட, அதற்கான பதிலை பிரதமரோ, அவரது அலுவலகமோ இது வரை தெரிவிக்கவில்லை.


ஜனநாயக முறைப்படி இந்த நாட்டின் குடிமகன் என்ற உரிமையில் ஜெயலலிதாவின் மரணத்தை பற்றிய சந்தேகத்தை பிரதமருக்கு தெரிவித்திருந்தேன். லட்சக்கணக்கான மக்களுக்கு தெரிந்த அந்தக்கடிதம், பிரதமரின் பார்வைக்கு போகாதது, குடிமகனாகிய நம்மை சூறையாடுவதற்கு சமம். பிரதமரை நான் பெரிதும் மதித்தேன், அனைத்து குடிமகன்கள் அவருக்கு முன் சமம் என்றால் என்னுடைய கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் புறக்கணிப்பது ஏன்.? தமிழகம் அனைத்து விதத்திலும் மத்திய அரசால் புறக்கப்படுகிறதோ என்று எண்ண தோன்றுகிறது.


ஜெலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பலரும் அவரை சென்று பார்த்தனர். ஆனால் அவரது உடந்நிலைப்பற்றி ஒருவருக்கும் உண்மை தெரியவில்லை. ஜெயலலிதா மறைவு, வர்தா புயல் என தமிழக மக்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளார்கள். விவசாயிகள் மடிந்து கொண்டிருக்கிறார்கள், கலாச்சாரத்தை மீ்ட்க கூட போராட வேண்டியிருக்கிறது. இந்தமாதிரி சூழலில் மத்திய அரசுக்கு தமிழக மக்களுக்கு உறுதுணையாகவும், அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஏதாவது செய்யும் என்று நினைத்தோம், ஆனால் எதற்குமே பதில் கிடைக்கவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது குடிமகனுக்கு நாட்டில் எந்த பாதுகாப்பும் இல்லை என்று தானே அர்த்தம். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மர்மமான முறையில் இறந்திருக்கிறார், அதை ஒளிவு மறைவு இன்றி தெளிவுப்படுத்த வேண்டாமா...?, ஒரு முதல்வரின் மரணத்தில் உள்ள சந்தேகத்தையும் தெரிந்து கொள்ள தெருவில் இறங்கி தான் போராட வேண்டுமா...?


இவ்வாறு நடிகை கவுதமி கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in