டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடந்து முடிந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாரியப்பன், பலகோடி ரூபாய் பரிசுகள் முதல் பத்மஸ்ரீ விருது வரைக்கும் அவருக்கு குவிந்து வருகிறது. மாற்று திறனாளியான மாரியப்பன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறி ஒலிம்பிக் பதக்கத்தை முத்தமிட்ட கதையை ஐஸ்வர்யா தனுஷ் படமாக இயக்குகிறார்.
இதற்கான பணிகளையும் துவக்கி விட்டார். ஐஸ்வர்யா எழுதிய திரைக்கதைக்கு குக்கூ, ஜோக்கர் படங்களின் இயக்குனர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
எல்லாம் தயாராக இருந்தாலும் மாரியப்பன் கேரக்டரில் நடிக்க சரியான ஆள் கிடைக்கவில்லை. இதனால் மாரியப்பனையே நடிக்க வைத்து விடலாமா என்று யோசித்து வருகிறார் ஜஸ்வர்யா. இயக்குனர் ராஜுமுருகன் மூலம் மாரியப்பனின் பெற்றோரிடமும், மாரியப்பனிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.