இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார். தயாரிப்பாளர் சங்க தேர்தல் வருகிற மார்ச் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் சங்க தேர்தல் போலவே தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடும் போட்டி உருவாகி வருகிறது. ஏற்கனவே பதவியில் உள்ள தாணு அணி, ஜேகே ரித்தீஷ் தலைமையில் ஒரு அணி, கேயார் தலைமையில் ஒரு அணி, விஷால் அணி என பல கட்ட போட்டி நடைபெற இருக்கிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நடவடிக்கைகளை விமர்சித்து, பேட்டி அளித்ததாக, நடிகர் விஷால், சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், விஷால் மனு தாக்கல் செய்தார். இதனால் விஷால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலும், ஓட்டு போட முடியாத சூழலும் உருவானது. ஆனால் விஷால் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். கோர்ட் உத்தரவுபடி, விஷால் மீதான சஸ்பெண்ட் உத்தரவையும் இன்று தயாரிப்பாளர் சங்கம் வாபஸ் பெற்றது. இதனால் விஷாலுக்கு இருந்த சிக்கல தீர்ந்தது.
இந்நிலையில் தன் மீதான சஸ்பெண்ட் ரத்தானதால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் களமிறங்க முடிவு செய்துவிட்டார். வருகின்ற தேர்தலில் தன் அணி சார்பில் அவரே தலைவர் பதவிக்கு நிற்க உள்ளார். ஏற்கனவே தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்த நடிகை குஷ்பு, இப்போது பொருளாளர் பதவிக்கு போட்டியிட உள்ளார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
நடிகர் சங்க தேர்தல் போன்று தயாரிப்பாளர் சங்க தேர்தலும் சூடுபிடிக்க இருக்கிறது.