ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சான்ட்ரா தாமஸ் தெரியும் தானே.. ஆம்.. விஜய் நடித்த 'தெறி' படத்தை கேரளாவில் வெளியிட்ட வினியோகஸ்தரே தான்.. இன்னும் சொன்னால் சில வாரங்களுக்கு முன், தனது பார்ட்னர் விஜய்பாபு தன்னை அடித்ததாக போலீஸில் புகார் அளித்து மீடியாவில் பரபரப்பாக இடம்பிடித்தாரே அவரே தான்.. பிரைடே பிலிம் ஹவுஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதராரான இவர், விஜய்பாபு மீது புகார் கொடுத்த அதே வேகத்தில் அதை திரும்ப பெற்றுக்கொண்டு, நாங்கள் எப்போதும் நண்பர்களாக்கும் என மீண்டும் அதிரவிட்டவர்..
இப்போது மீண்டும் ஒரு சங்கடத்தில் தேவையில்லாமல் சிக்கவைக்கப்பட்டதால் மீடியாக்கள் மீது பயங்கர கொந்தளிப்பில் இருக்கிறார்.. விஷயம் இதுதான்.. கேரளாவில் பச்சளம் என்கிற பகுதியை சேர்ந்த சான்ட்ரா தாமஸ் என்கிற பெண்மணி பூக்களை ஏற்றுமதி செய்வதாக பொய்யாக கணக்கு காட்டி வருமான வரி ஏய்ப்பு செய்தததாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது..