பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
மணிரத்னம் அடுத்து இயக்க இருக்கும் படத்தில், வில்லனாக நடிக்க இருக்கிறார் நம்ம ஆக்ஷ்ன் கிங் அர்ஜூன். தமிழ் சினிமாவில் இப்போதும், தனது நடிப்பால் அசத்தி வருபவர் நடிகர் அர்ஜூன். இவர் கடைசியாக "மங்காத்தா" படத்தில் அஜித்துடன் சேர்ந்து வில்லன் ரோலில் நடித்தார். மங்காத்தாவில் அர்ஜூனின் நடிப்பு, கோலிவுட் வட்டாரத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மணிரத்னம் அடுத்து, கார்த்திக் மகன் கவுதமை வைத்து இயக்க இருக்கும் "பூக்கடை" படத்தில் அர்ஜூனையும் நடிக்க வைக்க இருக்கிறார். ஆனால் படத்தில் அர்ஜூன் ஏற்றிருப்பது வில்லன் வேடமாம். மணிரத்னம் படத்தில் அர்ஜுன் நடிப்பது இதுவே முதல்முறை. இதுபற்றி அவர் கூறுகையில், அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்கிறார்.
தற்போது மணிரத்னம், படத்திற்கான நாயகியை தேடி வருகிறார். ஹீரோயின் கிடைத்த பின்னர் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீசியன்கள் பற்றிய முழுவிரமும் அறிவிக்கப்படும்.