ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் சிம்பு திடீர் பேட்டி அளித்தார். அப்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் என்னையும் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நடுகுப்பம் மீனவர்களுக்கு மீன் மார்க்கெட் கட்டித் தரவேண்டும். இல்லாவிட்டால் நான் ரோட்டில் நடமாடியாவது கட்டித் தருவேன். ஜல்லிகட்டு தடையின்றி நடக்க முழு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். தற்போது தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும். இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வருக்கு 3 கோரிக்கைகள் வைத்தேன். அதனை ஏற்று நடுக்குப்பத்தில் 70 லட்சம் ரூபாய் செலவில் நிரந்தர மீன் மார்க்கெட் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அறிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சிம்பு தெரிவித்துள்ளார்.