இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஜெயம்ரவி, ஹன்சிகா, அரவிந்தசாமி நடித்துள்ள போகன் படத்தை லக்ஷ்மண் இயக்கி உள்ளார். பிரபுதேவாவும், ஐசரி கணேசும் இணைந்து தயாரித்துள்ளனர். இமான் இசை அமைத்துள்ளார். படம் இன்று வெளிவந்துள்ளது.
படம் பற்றி ஜெயம் ரவி கூறியதாவது: பிரபுதேவா சாரும், ஐசரி கணேஷ் சாரும் என் குடும்ப நண்பர்கள். ஒரு படம் நடித்து தரும்படி என்னிடம் கேட்டபோது நான் மெய்சிலிர்த்துப் போனேன். அவர்கள் நினைத்தால் பெரிய ஹீரோக்களிடம் சென்றிருக்கலாம். என்னை தேடி வந்தார்கள். அதனால் அவர்களுக்கு நல்ல வெற்றிப்பட கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அப்போது ரோமியோ ஜூலியட் வெற்றி பெற்றிருந்த நேரம், பிரபு தேவாவும், ஐசரி கணேசும் படத்தை பார்த்தார்கள் அவர்களுக்கு பிடித்திருந்தது. லக்ஷ்மணை இயக்குனராக முடிவு செய்தோம். அவரிடமிருந்த நான்கைந்து கதைகளில் போகன் கதையை தேர்வு செய்தோம்.
போகனை கதையாக சொல்வது கடினம். காரணம் அது காட்சிளால் சொல்லப்படும் கதை. ஒருவனுக்குள் இன்னொருவன், இதுதான் படத்தின் ஒன்லைன். நான் நடித்த படங்களிலேயே அதிகம் சிரமப்பட்டது இந்தப் படத்திற்காகத்தான். காரணம் தோற்றம் என்னுடையதாக இருக்கும் மேனரிசம் இன்னொருவருடையதாக இருக்கும். காதல், செண்டிமென்ட், ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி எல்லாமே சம அளவில் இருக்கும். அதோடு ஒரு சூப்பர் நேச்சுரல் பவரும் இணைந்திருக்கிறது. இப்படி எல்லாமே ஒரு ஸ்கிரிப்டுக்குள் அமைவது அபூர்வம். போகனில் அது அமைந்திருக்கிறது. ஒரு ரசிகனாக நான் கைதட்டி, விசிலடித்து பார்த்த படம். அப்படியே ரசிகர்களும், ரசிப்பார்கள் என்ற நம்புகிறேன். என்றார் ஜெயம்ரவி.