மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கடந்த ஆண்டு வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படம் மெட்ரோ. சென்னையில் நடக்கும் செயின் பறிப்பு சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரான இந்தப் படம் தணிக்கை குழுவில் போராடி வெளிவந்து வெற்றி பெற்றது. தற்போது அனந்த கிருஷ்ணன் புதிய படத்தை ஆரம்பித்து விட்டார். இதில் தெகிடி படத்தில் நடித்த அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. பட அதிபர் ஏவிஎம் சரவணன் தொடங்கி வைத்தார். படப்பிடிப்புகள் மார்ச் மாதத்திலிருந்து முழு வீச்சில் நடக்கிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.ராமசாமி தயாரிக்கிறார். மெட்ரோ போன்று இதுவும் க்ரைம் த்ரில்லர் கதை. 3 காலகட்டங்களில் நடக்கிற கதை அமைப்பு. என்கிறார்கள்.