சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ரசிகர்களுக்காக, தணிக்கை குழு பிரச்சினை காரணமாக பல படங்களிள் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டிருக்கிறது. இது காலம் காலமாக நடந்து வருகிற ஒன்று. ஆனால் முதன் முதலாக கிளைமாக்ஸ் மாற்றப்பட்டது நவீன சாரங்கதரா என்ற படத்தில்தான். மாற்றியவர் தமிழ் சினிமாவின் தந்தை என்ற போற்றப்படுகிற கே.சுப்பிரமணியம்.
1937ம் ஆண்டு ஜெனரல் பிக்சர்ஸ் கார்பரேஷன் என்ற நிறுவனம் சாரங்கதாரா என்ற படத்தை இந்தியில் தயாரித்தது. இதில் கொத்தமங்கலம் சீனு, டி.எம்.சாரதாம்பாள் நடித்தனர். வி.கே.பாதம் என்பவர் இயக்கினார். இந்தப் படம் தயாரிப்பில் இருந்தபோது நவீன சாரங்கதாரா என்ற பெயரில் கே.சுப்பிரமணியம் தமிழில் அதே கதையை இயக்கினார். இதில் தியாகராஜ பாகவதரும், சுப்புலட்சுமியும் நடித்தனர்.
இது ஒரு பிரபலமான புராணக்கதை. சித்ராங்கி என்ற அழகிய இளவரசிக்கு மணம் முடிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. பல தேசத்து இளவரசர்களின் ஓவியங்கள் அவளுக்கு காட்டப்படுகிறது. அதில் அவள் அழகான தோற்றம் கொண்ட சாரங்கதரன் என்ற இளவரசனை தேர்வு செய்கிறாள். சாரங்கதரன் நல்ல இளவரசன்தான். ஆனால் அவனது தந்தை பெண் பித்தன். திருமணத்துக்கு மணமகன் வரமுடியாவிட்டால் அவனது வாளுக்கு மாலையிட்டு கணவனாக்கி கொள்வது மரபு. அதன்படி சாரங்கதரன் யுத்த களத்தில் இருப்பதை பயன்படுத்தி சித்ராங்கியின் அழகில் மயங்கிய சாரங்கதரினின் தந்தை தனது வாளை அனுப்பி மணமுடிக்கிறான். தந்தையை மணமுடித்தால் தான் விரும்பியவனுக்கு சித்தியாகிறாள் சித்ராங்கி.
போர்களத்தில் இருந்து திரும்பிய இளவரசன் தந்தையின் மனைவியை தன் மனைவியாக ஏற்க மறுக்கிறான். கன்னி விரதம் இருப்பதாக கூறி பெண்பித்தனான மன்னனிடமிருந்து தப்பும் சித்ராங்கி நடந்த விஷயங்களை கூறி தன்னை மனைவியாக ஏற்குமாறு இளவரசனிடம் மன்றாடுகிறாள். இதற்கு மறுக்கும் அவனை பற்றி தந்தையிடம் தவறாக சொல்லிவிடுகிறாள் சித்ராங்கி. இதனால் ஆத்திரமடைந்த தந்தை மகனின் மாறுகால் மாறு கை வாங்கிவிடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத சித்ராங்கி தற்கொலை செய்து கொள்கிறாள். இதுதான் படத்தின் கதை.
கே.சுப்பிரமணியத்தின் நவீன சாரங்கதாரா படப்பிடிப்பு முடியும் நிலையில் இந்தியில் சாரங்கதாரா வெளியாகி படுதோல்வி அடைந்தது. அதற்கு காரணம் என்ன என்று யோசித்த கே.சுப்பிரமணியம், ஹீரோவின் மாறு கால் மாறு கை வெட்டப்படுவதும், ஹீரோயின் தற்கொலை செய்வதுமான கிளைமாக்சை மக்கள் ஏற்கவில்லை என்று தெரிந்தது. உடனே தனது கதையில் மாறுகால் மாறுகை வெட்டப்பட்ட ஹீரோவுக்கு ஒரு புத்த துறவி மீண்டும் கால், கை வரவைப்பது போன்றும், தவறை உணர்ந்த மன்னன், சித்ராங்கிக்கும், சாரங்கதரனுக்கும் திருமணம் செய்து வைப்பது போலவும் கிளைமாக்சை மாற்றி எடுத்து வெளியிட்டார். படம் தமிழில் வெற்றி பெற்றது.