ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தான் நடிக்கும் படங்களில் எல்லாம் கோபம் கொண்டு சீறும் சிங்கமாக நடிக்கும் தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் அல்லு அர்ஜுன் சுபாவத்தில் ஒரு சாதுப்பசு என்பார்கள் அவரைப்பற்றி நன்கு அறிந்தவர்கள்.. வெளியிலும் சரி, படப்பிடிப்பிலும் சரி, யாரிடமும் கோபப்பட மாட்டாராம் அல்லு அர்ஜுன்.. அப்பட்டிப்பட்டவரையே படப்பிடிப்பு தளத்தில் தங்களது செயலால் கோபம் வரும் அளவுக்கு தூண்டிவிட்டார்களாம் சில மாடல் அழகிகள்..
தற்போது 'துவ்வடா ஜெகநாதம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன்.. இந்தப்படத்தை ஹரீஷ் ஷங்கர் என்பவர் இயக்கி வருகிறார்.. இந்தப்படத்தில் இடம் பெரும் சங்கீத கலா நாட்டிய நிகழ்ச்சிக்காக சில மாடல் அழகிகள் வரவழைக்கப்பட்டிருந்தனராம்.. ஆனால் வந்தவர்களுக்கோ சினிமா படப்பிடிப்பு தளம் புதிய அனுபவம் என்பதால், செல்பி எடுத்துக்கொள்வதும் ஒருவருக்கொருவர் கிண்டலும் கேலியுமாக பேசிக்கொண்டு இருந்ததும் படக்குழுவினருக்கும் படப்பிடிப்பு நடத்துவதற்கும் இடைஞ்சலாக இருந்ததாம்..
முதலில் புரொடக்சன் மேனேஜர் மூலமாக அவர்களை அழைத்து அமைதியாக இருக்கும்படி சொல்ல சொன்னாராம் அல்லு அர்ஜுன். ஆனாலும் அவர்களது சேட்டை மீண்டும் தொடரவே, அவர்களை தானே நேரடியாக அழைத்து, படப்பிடிப்பு தளத்தில் செல்பி, போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் படக்குழுவினருக்கு தொந்தரவு தரக்கூடாது என்றும் எச்சரித்தாரம். அதன்பின் தான் மாடல் அழகிகள் சைலன்ட் ஆனார்களாம்.