தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சுந்தர் .சி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார், 300 கோடி ரூபாய் பட்ஜெட் என தகவல்கள் வெளிவந்தும் தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என யாருமே 'சங்கமித்ரா' படத்தில் நடிக்க சம்மதிக்கவில்லை. வேறு வழியில்லாமல் தற்போது தமிழில் மார்க்கெட் இல்லாத ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோரை நாயகனாக ஒப்பந்தம் செய்தார்கள். இருவரையும் சேர்த்து நடிக்க வைத்தாலும் சில பல கோடிகளுக்கு மட்டும்தான் வியாபாரம் நடக்கும். ஆனால், அவர்களை நம்பி 300 கோடி ரூபாய் வரை எப்படி முதலீடு செய்கிறார்கள் என திரையுலகத்திலேயே ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஹீரோக்கள்தான் சரியாக அமையவில்லை, ஹீரோயின்களையாவது பெரிய ஸ்டார் ஆக ஒப்பந்தம் செய்வோம் என கடந்த சில மாதங்களாக படக் குழுவினர் முயன்று கொண்டிருக்கிறார்களாம். ஆனால், இன்னமும் ஒரு ஹீரோயின் கூட சிக்கவில்லை என்கிறார்கள். ஹாலிவுட் நடிகையாகவும் ஆகிவிட்ட தீபிகா படுகோனிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம். ஹாலிவுட் ஹீரோக்களுடன் அடுத்தடுத்து நடிக்க ஆசைப்படும் தீபிகா, ஆர்யாவுடன் நடிக்க சம்மதிப்பாரா என்ற சந்தேகமும் உள்ளதாம்.
இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தில் முன்னணி ஹீரோக்கள் நடித்தால் படத்தின் வியாபாரம் எங்கேயோ போகுமே என்றும் சிலர் ஆலோசனை சொல்ல, படக் குழுவினர் 'பாகுபலி' படத்தை உதாரணம் சொல்கிறார்களாம். பிரபாஸ் கூட தெலுங்கில் மகேஷ் பாபு, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோருக்குப் பின்தான் இருந்தவர், 'பாகுபலி' படத்தில் நடித்த பிறகு அவரும் பெரிய ஹீரோவாகிவிட்டார் என்கிறார்கள்.