'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த 30 ஆண்டுகளாக யு.கே.முரளி இன்னிசை மழை என்ற இசைக் குழுவை நடத்தி வருபவர் யு.கே.முரளி. அதோடு, நான்காம் தமிழன், காதலுக்கு கண் இல்லை, மகாராணி கோட்டை, நான் யார் ஆகிய படங்கள் இவர் இசையில் திரைக்கு வந்துள்ளன. அதைத் தொடர்ந்து தற்போது அய்யனார் வீதி, ஆமா நான் பொறுக்கிதான், சென்னை டூ பாங்காக், தொண்டியான், அது விடாது போன்ற படங்களுக்கு தற்போது பிசியாக இசையமைத்து வருகிறார்.
தனது இசைப்பயணம் குறித்து யு.கே.முரளி கூறுகையில், முறைப்படி இசையை பயின்று விட்டு இசைக்குழு நடத்தி வந்தேன். அதோடு, சென்னையில் இசை மற்றும் நடனம் பயின்றுகொடுக்கும் ஒரு பள்ளியையும் கடந்த 27 வருடங்களாக நடத்தி வருகிறேன். அந்த இசைப்பள்ளியை பாடகர் கே.ஜே.ஜேசுதாசும், நடனப்பள்ளியை நடன மாஸ்டர் ராகுராமும் திறந்து வைத்தனர். முதல்நாள் இசைப்பள்ளியை மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் நடத்தி ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிலையில், சினிமாவில் இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் இசையமைத்த படங்கள் பெரிய நடிகர்களின் படங்களாக இல்லாததால் சரியான பிரமோஷன் இல்லாமல் பாடல்கள் எதிர்பார்த்தபடி ஹிட்டாகவில்லை. இருப்பினும், தற்போது டைரக்டர் கே.பாக்யராஜ், பொன்வண்ணன், சாட்டை யுவன் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் அய்யனார் வீதி படத்திற்கு இசை யமைத்த பிறகு விரைவில் சினிமாவில் நானும் முன்னணி இசையமைப்பாளராக விடுவேன் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
காரணம், இந்த படத்தில் எனது இசையைக்கேட்ட கே.பாக்யராஜ் என்னை பாராட்டினார். அவரது பாராட்டு பெரிய உற்சாகத்தைத் தந்திருப்பதோடு, இந்த படமே எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. அதனால் கூடிய சீக்கிரமே முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் இசையமைப்பாளர் யு.கே.முரளி.