பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த ஒரு மாத காலமாக கேரளாவில் புதிய படங்களை திரையிட விடாமல் நடைபெற்ற தியேட்டர் அதிபர்களின் கூட்டமைப்பு நடத்திய வேலை நிறுத்தத்தால் மலையாள சினிமா சற்று முடங்கியது என்னவோ உண்மைதான்.. அதனால் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக வேண்டிய நான்கு பெரிய படங்களின் ரிலீஸும் கேள்விக்குறியாகின.. ஒருவழியாக ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்ததும் துல்கர் நடித்த 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' மற்றும் மோகன்லாலின் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' ஆகிய படங்கள் கடந்த 19 மற்றும் 20 தேதிகளில் அடுத்தடுத்து வெளியாகின.
இந்த ஸ்ட்ரைக்கால் தேங்கிய பிருத்விராஜின் 'எஸ்றா' படமும் வரும் பிப்-10ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.. இந்த ஸ்ட்ரைக்கால் பாதிக்கப்பட்ட இன்னொரு படம் தான் சித்திக் டைரக்சனில் ஜெயசூர்யா நடித்துள்ள 'பக்ரி'.. இந்தப்படம் எப்போது ரிலீசாகும் என தெரியாத சூழ்நிலை நிலவிய வேளையில், வரும் பிப்-3ஆம் தேதி இந்தப்படத்தை ரிலீஸ் செய்வதாக தற்போது அறிவித்துள்ளார்கள். இதில் ஜெயசூர்யாவின் கேரக்டர் பெயர் லக்கி.. அவர் ஒரு இஸ்லாமிய இளைஞனாக நடித்திருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும் படத்தின் ட்ரெய்லரில் அவர் சந்தனம் வைத்த நெற்றியுடன் காட்சியளிப்பது இது ஒரு ஆள் மாறாட்ட கதையாக இருக்கலாமோ என்கிற யூகத்தையும் ஆர்வத்தையும் கிளப்பிவிட்டுள்ளது.