தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத நடிகர் பிரசன்னா தெலுங்கு திரைப்படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். தமிழில் ஹீரோவாக சில படங்கள் நடித்த பிரசன்னா, பட வாய்ப்புகள் குறையவே அஞ்சாதே படத்தின் வாயிலாக வில்லனாக அறிமுகமானார். அதன்பின்னர் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்ட பிரசன்னாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகளே இல்லை எனலாம். இந்நிலையில் சாய் தரண் தேஜ் நாயகனாக நடிக்கும் 'ஜவான்' படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை ஜவான் பட இயக்குனர் ரவியும் உறுதி செய்துள்ளார். நாகார்ஜூனா நடிப்பில் 2013ல் வெளிவந்த 'பாய்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பிரசன்னா, நான்கு வருட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கின்றார். இயக்குனர் பிவிஎஸ் ரவி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சாய் தரண் தேஜிற்கு ஜோடியாக மெஹரீன் நடிக்கின்றார். நேற்று(ஜனவரி 30) நடைபெற்ற இப்படபூஜையில் கலந்து கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பை துவங்கி வைத்தார்.