ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத நடிகர் பிரசன்னா தெலுங்கு திரைப்படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். தமிழில் ஹீரோவாக சில படங்கள் நடித்த பிரசன்னா, பட வாய்ப்புகள் குறையவே அஞ்சாதே படத்தின் வாயிலாக வில்லனாக அறிமுகமானார். அதன்பின்னர் நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்ட பிரசன்னாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகளே இல்லை எனலாம். இந்நிலையில் சாய் தரண் தேஜ் நாயகனாக நடிக்கும் 'ஜவான்' படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை ஜவான் பட இயக்குனர் ரவியும் உறுதி செய்துள்ளார். நாகார்ஜூனா நடிப்பில் 2013ல் வெளிவந்த 'பாய்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பிரசன்னா, நான்கு வருட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கின்றார். இயக்குனர் பிவிஎஸ் ரவி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சாய் தரண் தேஜிற்கு ஜோடியாக மெஹரீன் நடிக்கின்றார். நேற்று(ஜனவரி 30) நடைபெற்ற இப்படபூஜையில் கலந்து கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பை துவங்கி வைத்தார்.