'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்ரமின் மார்க்கெட் ஸ்டெடியாக இருந்தது வரை அவருடன் நடிக்க இளவட்ட நடிகைகள் முண்டியடித்தனர். ஆனால் இப்போது அவரது மார்க்கெட் டல்ல டிப்பதால் மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கும் நடிகைகளிடம்அவருடன் நடிக்க கால்சீட் கேட்டால் கதை பிடிக்கவில்லை, கால்சீட் இல்லை என ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி எஸ்கேப்பாகி வருகிறார்கள். அந்த வகையில், வாலு பட டைரக்டர் விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முதலில் கீர்த்தி சுரேஷிடம்தான் கால்சீட் கேட்டார்கள். ஆனால் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மட்டுமே நடித்து வரும் அவர், கால்சீட் இல்லை என்று சொல்லி விட்டார். அதன்பிறகுதான் மஞ்சிமா மோகன், சாய் பல்லவி என்று வெவ்வேறு நடிகைகளிடம் கால்சீட் கேட்டனர்.
இதில், சாய் பல்லவி விக்ரமுடன் நடிக்க கமிட்டாகி பின்னர் கால்சீட் பிரச்சினை யால் வெளியேறினார். அதையடுத்து தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரோ, கதையும், எனக்குரிய கதாபாத்திரமும் பிடித்தால் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூற, அவரிடம் முழுக்கதையையும் சொல்லப்பட்டது. பின்னர் ஓரிரு தினங்களில் பதிலளிப்பதாக சொன்ன தமன்னா, இப்போது விக்ரம் படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார். அதையடுத்து, அவருக்கு சம்பளம் உள்ளிட்ட விசயங்களும் பேசி முடிவுக்கு வந்து விட்டது. பிப்ரவரி 10-ந்தேதி முதல் சென்னையில் விக்ரம்-தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.