Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானம், சிவகார்த்திகேயனை மனதில் கொண்டு சினிமாவுக்கு வரவில்லை! -கார்த்திக்

30 ஜன, 2017 - 13:28 IST
எழுத்தின் அளவு:
karthik-with--new-two-movie

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் ஆகியோர் சினிமாவிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் அவர்களைத் தொடர்ந்து மா.கா.பா.ஆனந்த் உள்பட மேலும் பலரும் விஜய் டிவியில் இருந்து சினிமாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் கனா காணும் காலங்கள், ஆபீஸ் போன்ற சீரியல்களில் நடித்த நிதின் கார்த்திக்கும் ஒருவர். இவர் தற்போது 468, நாலு பேருக்கு நல்லது நடக்கனும்னா எதுவும் செய்யலாம் ஆகிய படங்களில் லீடு ரோலில் நடித்து வருகிறார்.


இதுபற்றி கார்த்திக் கூறுகையில், ஆபீஸ் சீரியலில் நடித்து வந்தபோதுதான் எனக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து சினிமாவில் கொடுக்கிற என்ட்ரி சரியாக இருக்க வேண்டும் என்று பல கதைகள் கேட்டு அதில் 468, நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவும் தப்பில்ல ஆகிய இரண்டு படங்களின் கதைகளை செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன். மேலும், நான் இந்த மாதிரியான நடிகனாகத்தான் வரவேண்டும் என்கிற எந்த ஆசைகளும் வைத்துக் கொள்ளவில்லை. எந்த வேடத்தில் நடித்தாலும் நல்ல நடிகன் என்ற பெயரெ டுக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டுதான் இந்த படங்களில் நடிக்கிறேன்.


முக்கியமாக, விஜய் டிவியில் நடித்து பிரபலமானவர்கள் சினிமாவிலும் ஜெயித்து விடலாம் என்ற செண்டிமென்டை கருத்தில் கொண்டு நான் சினிமாவில் நடிக்க வரவில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்கனவே எனக்குள் இருந்தது. மேலும், நான் சினிமாவில் நடிக்க வந்தபோது சீரியல் நடி கன் என்பதால் சிலர் மைனஸாககூட பார்த்தார்கள். ஆனால் அந்த எண்ணங் களை உடைத்தெறிய வேண்டும் என்று இந்த படங்களில் சிறப்பாக நடித்திருக்கிறேன்.


மேலும், இதன்பிறகு சின்னத்திரைக்கு செல்லும் ஐடியா எதுவும் இல்லை. அப்படி சென்றால் கல்லூரிக்கு வந்த பிறகு பள்ளிக்கு சென்றது மாதிரியாகி விடும். அதனால் இனிமேல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் எனக்குள் உள்ளது என்று கூறும் கார்த்திக், சின்னத்திரையில் இரண்டே சீரியல்களில் நல்ல நடிகன் என்ற பெயரை பெற்ற நான், இப்போது நடித்துள்ள இரண்டு படங்களில் சினிமாவிலும் நல்ல நடிகன் என்ற அங்கீகாரத்தைப் பெற்று விடுவேன் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in