அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தவர் அபி சரவணன். தற்போது நாங்களெல்லாம் வேலைக்கு போயிட்டா ஊரை யாரு பாத்துக்கிறது உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். மதுரைக்காரரான இவர், ஜல்லிக்கட்டு போராட்டம் வெடித்தபோது, மதுரையில் நடந்த போராட்டங்களில் தானும் கலந்து கொண்டு போராடினார். அதன்காரணமாக 5 முறை அவர் போலீசாரால் தாக்கப்பட்டிருக்கிறார்.
அதன் காரணமாக, 3 முறை மாறி மாறி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் அபி சரவணன். கடந்தசில தினங்களுக்கு முன்புதான் உடல்நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். அப் போது அவரை நடிகர் விஜயசேதுபதி கட்டித்தழுவி வரவேற்றுள்ளார். மேலும், தற்போது உடல்நலம் தேறி விட்ட அபிசரவணன், ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளாமல் சென்னை திரும்ப மாட்டேன் என்று ஏற்கனவே முடி வெடுத்திருந்தேன். அதன்படி மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பிறகுதான் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கலந்து கொள்ள சென்னைக்கு வருவேன் என்கிறார்.