விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
ஸ்ரீ சாய் சண்முகாக பிக்சர்ஸ் சார்பில் பி.செந்தில்வேல் மற்றும் விஜயசங்கர் தயாரித்துள்ள படம் அய்யனார் வீதி. யுவன், சாரா ரெட்டி, சிஞ்சு மோன், கே.பாக்யராஜ், பொன்வண்ணன் நடித்துள்ளனர். ஜிப்ஸி என்.ராஜ்குமார் இயக்கி உள்ளார். ஜி.கே.முரளி இசை அமைத்துள்ளார்.இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் கலந்து கொண்டு பேசியதாவது:
ஒரு படத்தை தயாரிப்பது அத்தனை சுலபமல்ல. அதை மிகுந்த சிரமப்பட்டே தயாரிக்கிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி அதிகம் வந்து விட்டது. பல கோடிகள் போட்டு படம் தயாரிக்கிறார்கள். ஆனால் வெகு சுலபமாக வீடியோவிலும், கேசட்டிலும் போட்டு படத்தை பார்த்து விடுகிறார்கள். இதுபோன்ற செயல்களை தடுக்க தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிற தாணு முழு முயற்சி எடுக்க வேண்டும். இதன் சிரமங்கள் குறித்து அவருக்கு தெரியும். பல படங்களை தயாரித்தவர்.
இதுகுறித்த வழக்குகள் நீதிமன்றத்திற்கு வரும்போது தனி கவனம் செலுத்தி, எங்களால் எந்தளவுக்கு முடியுமோ, அந்தளவுக்கு அதை தடைசெய்கிற நடவடிக்கைகளை நாங்கள் செய்திருக்கிறோம். இருந்தும் எங்களால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்றார். விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, கே.பாக்யராஜ், பொன் வண்ணன், ஆர்.கே.சுரேஷ் நடிகர் ஜெய் ஆகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.